காளையார் கோவில் அருகே கீழடி போன்று பழங்கால நகரம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே இலந்தக்கரை பகுதியில் பானை ஓடுகள், பவளப் பாசிகள், கல் பாசிகள், கண்ணாடி பாசிகள், நடுகல், முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளி நாணயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால நாணயம் கிடைத்துள்ளன.
நல்லேந்தல், புரசடை உடைப்பு, வேளாங்குளம், கருங்காலி உள்ளிட்ட பகுதிகளில் கல்வட்டம், நடுகல் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டுகள், கோயில் இடிபாடுகளை வைத்துப் பார்க்கும் போது 10-ம் நூற்றாண்டு வரை இப்பகுதி சிறப்பாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இப்பகுதியில் தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வு செய்தால் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என இப்பகுதியை ஆய்வு செய்த தொல்லியல் ஆர்வலர் தி. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
|