LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

நெடுநல்வாடை

 

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. 
நூல்
கோவலர் வாடையால் துன்புறுதல்
வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 5
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க  
கூதிர்க் கால நிலை
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை 10
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் 
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்  
ஊரினது செழிப்பு
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி 15
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்
கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப 20
அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த 
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை 
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு 25
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் 
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க  
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் 30
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் 
முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு 
தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் 
தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர 35
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல் 
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் 
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து 40
அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது 
மல்லல் ஆவணம் மாலை யயர  
கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
மனையுறை புறவின் செங்காற் சேவல் 45
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று 
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக 50
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் 
கூந்தல் மகளிர் கோதை புனையார் 
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து 55
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் 60
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் 65
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 70
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து 
கூதிர்நின் றன்றாற்  
அரசியின் அரண்மனை 
மனை வகுத்த முறை
போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் 
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து 75
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து  
கோபுர வாயில்
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 80
துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து 85
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்  
முற்றமும் முன்வாயிலும்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 90
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை 
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்  
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் 95
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்
கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில 100
அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து 
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப் 
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் 105
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு 
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ 110
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லில்  
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் 115
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 120
புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்  
கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு 
முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் 125
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த 130
மெல்லிதின் விரிந்த சேக்க  
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
மேம்படத் 
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி 
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை 135
ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் 140
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை 
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து 
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப் 
பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் 145
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு 
புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்  
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
தளிரேர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் 150
மெல்லியல் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் 
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி 
இன்னே வருகுவர் இன்துணை யோரென 155
உகத்தவை மொழியவும்  
தலைவியின் வருத்த மிகுதி
ஒல்லாள் மிகக்கலுழ்ந்து 
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக 160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து 
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா 
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு இன்னா 
அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம  
பாசறையில் அரசன் நிலை
மின்னவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் 170
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து 
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல 175
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு 
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் 
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு 
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப 180
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ 
வாள்தோள் கோத்த வன்கட் காளை 
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து 
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப 185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.  
நெடுநல்வாடை முற்றும்.
தனிப் பாடல்
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. 
நூல்

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தெனஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 5நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவமெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க  

கூதிர்க் கால நிலை

மாமேயல் மறப்ப மந்தி கூரப்பறவை படிவன வீழக் கறவை 10கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்  

ஊரினது செழிப்பு

புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி 15இருங்களி பரந்த ஈர வெண்மணற்செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழைஅகலிரு விசும்பில் துவலை கற்ப 20அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்கமுழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு 25தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்றநளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க  

முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்

மாட மோங்கிய மல்லன் மூதூர்ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் 30படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்துளி பேணார் பகலிறந்துஇருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர 35

மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல் பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் மடவரல் மகளிர் பிடகைப் பெய்தசெவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து 40அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்துஇரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇநெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை யயர  

கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்

மனையுறை புறவின் செங்காற் சேவல் 45இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாதுஇரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக 50வடவர் தந்த வான்கேழ் வட்டம்தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து 55இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்தசெங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்சிலம்பி வானூல் வலந்தன தூங்கவானுற நிவந்த மேனிலை மருங்கின் 60வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்கல்லென் துவலை தூவலின் யாவரும்தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் 65பகுவாய்த் தடவில் செந்நெருப் பாரஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடைகொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 70காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து கூதிர்நின் றன்றாற்  

அரசியின் அரண்மனை மனை வகுத்த முறை

போதே மாதிரம்விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து 75நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து  

கோபுர வாயில்

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 80துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டுநாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து 85ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலைவென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்  

முற்றமும் முன்வாயிலும்

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 90நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்  

அரண்மனையில் எழும் ஓசைகள்

பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவிபுல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடுநிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் 95கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயலஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசைநளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில 100

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினைமாண் பாவைகையேந் தையகல் நிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரிஅறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப் பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் 105பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லதுஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ 110மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்கருவொடு பெயரிய காண்பி னல்லில்  

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் 115இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்துசீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபுதூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 120புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டுஉள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்  

கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் 125புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்துஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்வேட்டம் பொறித்து வியன்கட் கானத்துமுல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த 130மெல்லிதின் விரிந்த சேக்க  

படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்

மேம்படத் துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்தோடமை தூமடி விரித்த சேக்கை 135ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்துநன்னுதல் உலறிய சின்மெல் லோதிநெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் 140பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப் பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் 145அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்  

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

தளிரேர் மேனித் தாய சுணங்கின்அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலைவம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் 150மெல்லியல் மகளிர் நல்லடி வருடநரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணை யோரென 155உகத்தவை மொழியவும்  

தலைவியின் வருத்த மிகுதி

ஒல்லாள் மிகக்கலுழ்ந்து நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக 160விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇயஉரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனிசெவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறறந்துஇன்னே முடிகதில் அம்ம  

பாசறையில் அரசன் நிலை

மின்னவிர்ஓடையொடு பொலிந்த வினைநவில் யானைநீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் 170களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல 175வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமாஇருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப 180புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடைதவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப 185நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்சிலரொடு திரிதரும் வேந்தன்பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.  

நெடுநல்வாடை முற்றும்.

தனிப் பாடல்

வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,பகையோடு பாசறை உளான்?

by Swathi   on 29 Mar 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
30-Oct-2013 03:11:10 சி செந்தில் குமார் said : Report Abuse
நன்றாக உள்ளது
 
30-Oct-2013 03:08:56 சி செந்தில் குமார் said : Report Abuse
வலைதளம் நன்றாக உள்ளது அதிகமான செய்திகள் பார்பதற்கு பயனாக உள்ளது இலக்கியம் பற்றி சுருக்கமாக தெரிய முடிகிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.