LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தேவை ஒரு விவசாய புரட்சி !

கிராமங்கள் மெல்ல சாக 
நகரங்கள் கொளுத்து வளர்கிறது

வற்றிய நீரோடையில் 
தொண்டை 
வறண்டு நிற்கிறது கொக்கு

துள்ளி விளையாடிய மீன்கள் 
அள்ளி போட ஆளில்லாமல் 
அனாதை பிணங்களாய்

வயல் வெளிகள் 
வரப்புகளை இழந்து 
வேலிகளை எல்லையாக்கி 
விலை பேசி விற்றபின் 
எங்கே விளையும் என் 
முப்போக விளைச்சல்

காவிரி கரைகளை 
காணாமல் 
கண்ணீர் வடிகிறது

மழை துளிகள் 
மரங்களை நனைக்காமல் 
மாடி கட்டடங்களில் 
விழுந்து மரணிகிறது

மருந்து உணவாகி போச்சு 
மரணம் கூட பெயர் தெரியா 
நோயகிபோச்சு 
ஆகமொத்தம் நம்ம விவசாயம் 
நாசமாபோச்சு

செயற்கை உரங்கள் 
வேண்டாம் நம்ம 
இயற்க்கை உரங்கள் போதும்

நகரங்கள் மீண்டும் 
கிராமங்கலாய் மாற வேண்டும் 
மரங்கள் மீண்டும் பச்சை 
வேர் விட வேண்டும்

உரம் போட்டு 
உருஞ்சபட்ட என் 
மண்ணின் உயிர் 
மீண்டும் விதைக்க பட வேண்டும்

விதை இல்லா 
மரம் வேண்டாம் 
பூ இல்லா காய் வேண்டாம் 
மனம் இல்லா மலர்கள் வேண்டாம்

ஆங்கில மருந்தால் 
மலட்டு தன்மை எய்திய 
என் வீடு பசு மாடு 
மீண்டும் கற்பமாக வேண்டும் 
என் வீட்டு காளை மாடு 
தந்தையாக வேண்டும்

அறிவியல் என்று சொல்லி 
அடித்த மருந்துகளால் 
பறந்து போன பட்டம்பூச்சியும் 
இறந்து போன மண் புழுவும் 
மீண்டும் என் வயலுக்கு வர வேண்டும்

விவசாயம் ஏதோ என்று 
எண்ணிவிட வேண்டாம் 
உனக்கான உயிர் 
அங்கேதான் பயிரிடபடுகிறது

எங்கேயோ தவறு தொடர்ந்துள்ளது 
அதை இப்போதே 
திருத்தி ஆக வேண்டும்

இயற்க்கை வழி திரும்புவோம் 
புதிய புரச்சி இங்கே இருந்து தொடங்கட்டும்

by Swathi   on 01 Sep 2014  0 Comments
Tags: விவசாய கவிதைகள்   Agricultural Revolution   விவசாய புரட்சி              
 தொடர்புடையவை-Related Articles
தேவை ஒரு விவசாய புரட்சி ! தேவை ஒரு விவசாய புரட்சி !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.