LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நீயும் நானும் சகோதரிகள்

உன் அழுகையின் குரல்

கேட்டு,மகிழ்வுடன்

உன் தந்தை என்னை

நட்டு வைத்தார்,இரண்டுமே

என் குழந்தையென்று, உன்னை

வளர்ப்பது போலே என்னையும்

வளர்த்தவர் அவர், உன்னை

தொட்டு தடவி மகிழ்வது

போலே, என்னையும் தொட்டு

தடவி வளர்த்தார்.என்

உடலில்,ஏற்படும் சிலிர்ப்பை

வெளியில் சொல்ல எனக்கு

வாயில்லை.!உன்னுள் ஏற்பட்ட

பருவ மாற்றம் என்னுள்ளும்

ஏற்பட்டதை என் தந்தைக்கு

தெரிவிக்க பூக்களாய் பூத்து

காட்டினேன்,உன்னை வளர்க்க

அவர் பட்ட சிரமம்

எனக்கு மட்டுமே தெரியும்.

ஒவ்வொரு துயரும் என்னிடம்

சொல்லி சொல்லி புலம்புவார்

மெளனமாய் கேட்பதை தவிர

எனக்கு என்ன வேலை!

அவர் தோளுக்கு மேல்

வளர்ந்திருந்தும் என்னால் பேச

முடியவில்லை! இலைகளாலும்

பூக்காளாலும் சொரிய வைத்து

ஆறுதல் படுத்துவேன்.உன்

திருமணத்தின் ஊர்வலத்தை கண்டு

மகிழ்ந்தவள், இந்த வீட்டை

விட்டு பிரிந்தபோது மெளனமாய்

அழுது நின்றவள்,உன் அப்பா

இல்லை ! என் அப்பா

இறந்த போது நான் அழுத

அழுகை யாருக்கு புரிந்திருக்கும் !



காலங்கள் தான் எவ்வளவு

வேகமாய் நகர்கின்றன!உன்

தோளுக்கு மேல் வளர்ந்த

பையனுடன் என் அருகில்

நின்று என்னை அண்ணாந்து

பார்த்து! மரம் நல்லா

பெரிசாயிடுச்சு, வெட்டிடலாம், பேசிய

என் சகோதரியை வருத்தத்துடன்

பார்த்தபொழுது !

 அம்மா உனக்கு மனசாட்சி

இருக்கா? தாத்தா நீ

பிறந்தப்ப நட்டு வச்ச

மரம், இதைய் போய்

வெட்ட சொல்றியே? நான்

இருக்கும் வரை இந்த

வேலை செய்யவிடமாட்டேன் !

ஆசையாய் என்னை தடவியவனை

அதே சிலிர்ப்புடன் என்

இலைகளையும், பூக்களையும் சொரிந்தேன்,!

என் தந்தை இன்னும்

உயிருடன் இருக்கிறார்.

you and me sisters
by Dhamotharan.S   on 13 May 2016  0 Comments
Tags: மரம்   சகோதரிகள்   Maram   Sagotharikal           
 தொடர்புடையவை-Related Articles
நாம் இழந்து(மறந்து)விட்ட மரவகைகளுள் முக்கியமான ஒன்று - இலுப்பை !! நாம் இழந்து(மறந்து)விட்ட மரவகைகளுள் முக்கியமான ஒன்று - இலுப்பை !!
பனை மரத்தின் வகைகள் பனை மரத்தின் வகைகள்
நீயும் நானும் சகோதரிகள் நீயும் நானும் சகோதரிகள்
அரசமரம்  -இல.பிரகாசம் அரசமரம் -இல.பிரகாசம்
மரத்தின் அருமை! - இல.பிரகாசம் மரத்தின் அருமை! - இல.பிரகாசம்
தென்னை மரம் ஏறும் இயந்திரம் தென்னை மரம் ஏறும் இயந்திரம்
குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்! குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்!
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.