|
|||||
நேந்திரம் பாயாசம் |
|||||
தேவையானவை: நேந்திரம்பழம்-2 தேங்காய்-1 வெல்லம்-400 கிராம் முந்திரி, திராட்சை-50 கிராம் நெய்-100 கிராம் தேங்காய்ப் துருவியது - 1 கிண்ணம் ஏலப்பொடி-சிறிதளவு செய்முறை: 1.இட்லி தட்டில் நேந்திரம்பழத்தை தோல் உரித்து வைத்து வேக வைக்க வேண்டும். 2.வெந்து சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு கூழாக அரைக்க வேண்டும். 3.தேங்காவை துருவி அதில் பால் எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். 4.நேந்திரம் பழக் கூழை பாகுடன் கலந்து கிளற வேண்டும். அத்துடன் தேங்காய்ப்பால், ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்க வேண்டும். 5.தேங்காய் துருவலை நெய்யில் சிவக்க வறுத்து பாயாசத்துடன் சேர்க்க சுவை இன்னும் அதிகமாகும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|