|
|||||
நேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன் |
|||||
காதலிக்க மறுத்தாலோ அமிலத் தாலே ----கருக்குகின்றீர் புகழ்ந்திட்ட மதிம கத்தை
காதலித்தோன் வேறுசாதி என்ற போது
----கண்முன்னே வெட்டுகின்றீர் துடிது டிக்க !
வாதங்கள் புரிந்துண்மை எடுத்து ரைத்தால்
----வார்த்தைகளில் அவதூறு பரப்பு கின்றீர்
மீதமென்ன கண்களிலே உடைகி ழித்து
---மிருகமென மின்னுடலை நக்கு கின்றீர் !
சிறுகுழந்தை என்றபோதும் பெண்ணென் றாலோ
----சிறுநீரின் துவாரத்தைக் கிழிக்கின் றீர்கள்
எறும்புடலில் ஊர்வதுபோல் கைக ளாலே
----எடுத்தணைத்துத் தடவுகின்றீர் மார்பி டத்தை !
உறுப்புக்கள் என்னநீங்கள் தின்ப தற்கா
----உடலினிலே இயற்கையன்னை படைத்த ளித்தாள்
அறுவடைக்கு முற்றாத நெல்லென் றாலும்
----அறுக்கின்றீர் அடுத்தவீட்டு விளைச்ச ளென்றே !
பொருள்களினை விற்பதற்கும் காட்சி யாக்கிப்
----பொழுதெல்லாம் எம்முடலைக் காட்டு கின்றீர்
விருப்பந்தான் இருந்தாலும் இலையென் றாலும்
----விளக்கணைத்தால் உடன்படுக்கப் பணிக்கின் றீர்கள் !
வருவாயை மதுவிற்குக் கொடுத்து விட்டு
----வளைகரத்தை ஒடித்தெட்டி உதைக்கின் றீர்கள்
நெருப்பாக எழுமுன்னே திருத்தம் கொள்வீர்
----நேர்நின்றே எதிர்த்திட்டால் இருக்க மாட்டீர் ! |
|||||
Neernintral | |||||
நீதியைத்தேடி பாவலர் கருமலைத்தமிழாழன்
ஆதியிலே புறாவிட்ட கண்ணீர்க் காக அரிந்துசதை அளித்துமன்னன் நீதி காத்தான் வாதியாக பசுஅடித்த மணியைக் கேட்டு வழங்கிட்டான் நீதியினை மகனைக் கொன்று ஏதிலியாய் சிலம்புடைத்த பெண்ணிற் காக ஏந்தியுயிர் தந்துநீதி காத்த மண்ணில் நீதிவிலை போகாதெனும் நம்பிக் கையில் நீதியினைத் தேடுகின்றார் கிடைக்கு மென்றே !
பண்ணிசைத்துக் காவிரியாள் நடந்தா ளென்று பகர்கின்ற பாடல்கள் பலவி ருந்தும் கண்முன்னே காட்சிதரத் தடைவி தித்துக் கன்னடத்தான் சிறைக்குள்ளே அடைத்து வைக்கக் கண்ணெல்லாம் பூரிக்க வயல்கள் பூத்துக் கண்டிட்ட முப்போகம் கனவாய்ப் போகத் தண்ணீர்க்காய் நீதியினைத் தேடித் தேடித் தவிக்கின்றான் விவசாயி தமிழ கத்தில் !
காலந்தான் கடந்தபோதும் உச்ச மன்றம் காவிரியாள் விலங்கொடித்துத் தீர்ப்ப ளிக்கப் பாலமாக இருக்கின்ற நடுவண் ஆட்சி பசுதானா தோலணிந்த புலியா என்னும் கோலத்தின் ஐயத்தைத் தீர்க்கும் வண்ணம் கோல்சாயா நடவடிக்கை எடுக்க வேண்டும் சீலமுடன் ஒற்றுமையாய் இந்தி யாவும் சிறப்புறவே நேயமுடன் வாழ வேண்டும் ! |
|||||
by Karumalaithamizhazhan on 16 Aug 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|