வனப்புடை அனிச்சம் புகைமூழ் கியதென இவ்வணங்கு அவ்வதர்ப் பேய்த்தேர்க்கு இடைந்தனள் தென்திசைக் கோமகன் பகடுபொலிந் தன்ன கறையடிச் சென்னியின் நகநுதி போக்கி குருத்தயில் பேழ்வாய்ப் பல்படைச் சீயம் (5)
அதர்தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன் கடுங்கால் கொற்றத்து அடும்தூ துவர்எனத் தனிபார்த்து உழலும் கிராதரும் பலரே ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி இருவான் போகிய எரிசுடர்க் கடவுள் (10)
மாதவர் ஆமென மேல்மலை மறைந்தனன் மின்பொலி வேலோய்! அன்பினர்க்கு அருளும் கூடற் பதிவரும் ஆடற் பரியோன் எட்டெட்டு இயற்றிய கட்டமர் சடையோன் இருசரண் அடைந்த மறுவிலர் போல (15)
அருளுடன் தமியை ஆடினை ஐய! தண்ணீர் வாய்த்தரும் செந்நிறச் சிதலை அதவுஉதிர் அரிசி அன்ன செந்தினை நுண்பதம் தண்தேன் விளங்கனி முயல்தசை வெறிக்கண் கவைஅடிக் கடுங்கால் மேதி (20)
அன்புமகப் பிழைத்துக் கல்லறைப் பொழிந்த வறள்பால் இன்னஎம் முழைஉள அயின்று கார்உடல் அனுங்கிய பைங்கன் கறையடி சென்னி தூக்கி நின்றன காட்டும் நெடுமறை அதள்வேய் சில்இடக் குரம்பையில் (25)
மற்றதன் தோலில் உற்றிரு வீரும் கண்படுத்து இரவி கீறுமுன் எண்பட நும்பதி ஏகுதல் கடனே ! (28)
|