LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நெற்பயிரும் பெற்றோரும்

உழுத நிலம் அதில் விதைத்த விதை,

முளைத்து பூமியை முட்டி,

தழைத்து வானத்தை பார்த்தது எட்டி.



வளர்ந்த பயிரின் பசுமை காக்க
திறந்த பூமி நீரை வார்க்க

வளர்ந்த பயிரின் பசுமை காக்க,

திறந்த பூமி நீரை வார்க்க,

பரந்த பூமி ஈரம் காக்க,

முளைத்து வந்த விதை

தழைத்து விடும் தளிர்....


விதைத்தவனுக்கு கண்கொள்ளா காட்சி,

அவன் மனம் கொள்ளும் மட்டற்ற மகிழ்ச்சி,


பரந்த  பூமியோ தாராள மனம் படைத்த தாய்,

பயிரோடு சேர்த்து களையும் வளர்ப்பாள்,

பயிர் காக்க நாம் களைவோம்,

கலந்து வளர்ந்த களையாவையும்.


பயிரின் பசுமை ஈர்த்து,

பறந்து வந்த வண்டெல்லாம்,

தன்னை மறந்துபோய்,

பயிரோடு உயிராக ஒட்டிக்கொள்ளும்.


உயிர்கொல்லி அதனை அளவோடு அள்ளி,

தெளித்து கொள்வோம் பூச்சி தன்னை,

பயிரில் காண்போம் மலர்ச்சி தன்னை.


காலம் கடந்து கருவுற்ற பயிரில்,

வெடித்து வெளியேறுவாள் நெல்மணி,

பச்சை பசுமையோடு,

பல இன்னல் பட்டதோடு,

நிமிர்ந்து நின்று வளர்ந்த பயிரை,

தலைகுனிய வைப்பாள் முற்றிய நெற்கதிர்.


வளமையாக வளர்ந்து வந்த பயிரை,

வாட வைத்து வைக்கோலாக்கி

அறுவடை என்னும் பெயரில்

பயிரெனும் தாயிடம் விடைபெறுவாள் நெல்மணி.


இதேபோலத்தான்,

இணைத்து பார்த்தால் இவ்வுலகில்

யாதொரு உயிரும் நெற்கதிர் போலே,

பசுமையாய் வாழ்ந்த பெற்றோர்கள் பலபேர்

அறுவடைக்கு பின் நெற்பயிர் வைக்கோலாவதைப்போல்,

பிள்ளைகள் பெரியோரானதும்,

காப்பகத்தில் காய்ந்து போகிறார்கள்...

கோவி . கந்தசாமி.

Paddy and Parents
by   on 15 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.