|
||||||||
ஒரு நெசவாளிக் கலைஞனின் வாழ்க்கை! |
||||||||
உழைத்தான் வியர்க்க உலகம் வியக்க கண்கள் விரிய கனவுகள் மலர உள்ளம் குளிர உவகை பெருக நெய்தான் பட்டு நெஞ்சம் நெகிழ வரைந்தான் ஓவியம் வண்ணக் காவியம் காண்போர் மயங்கும் கல்யாணப் புடவை வந்தது வறுமை விதியின் வடிவில் தறியால் நகர்ந்த வாழ்வு தறிகெட்டது நொந்தான் மனதால் நோய்வாய்ப் பட்டு கனவுகள் கலைய உணர்வுகள் உறைய ஊணின்றி உடல் கெட்டு போனான் புதைந்து பொறிகள் இயங்காது! |
||||||||
by Sadagopal Venugopal on 09 May 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|