சீனாவில் வயதான பெற்றோரை கவனிக்காத வாரிசுகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.சீன இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் தனிமையிலும், பாதுகாப்பின்றியும் வாழ்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு சீன அரசு பெற்றோரை பாதுகாக்கும் புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத்தின் படி ஒவ்வொரு பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களை சராசரியான இடைவெளியில் சென்று சந்தித்து, அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|