LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?


தமிழ்நாடு அரசிற்கான 2025 -26 நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில்  பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில் சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

"நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களைச் சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொதுச் சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்..." என்று தனது உரையில் தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. 


இந்தப் புதிய நகரத்தில் இடம் பெறும் வசதிகள்!

*  தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் 

*  நிதி நுட்ப வணிக மண்டலங்கள் 

*  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் 

*  உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் 

*  வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்

*  வணிக வளாகங்கள் 

* வர்த்தக மையங்கள் 

*  மாநாட்டுக் கூடங்கள் 

 * அரசு மற்றும் தனியார்த் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் 

*  சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்தியத் தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள் 

* விரிவான சாலைகள் 

* தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள் 

* பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புறச் சதுக்கங்கள் 

* பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகள் 

சென்னை மாநகரை இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவுப் பேருந்துகள், மெட்ரோ இரயில் விரிவாக்கம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்படும்.  

உலகத் தரத்துடன் கூடிய (Global City) முதற்கட்டப் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




by hemavathi   on 14 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா! 1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.