LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தோனேஷியாவில் புது முயற்சி- பிளாஸ்டிக் கொடுத்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!

பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்து, பஸ்சில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்தோனேஷிய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் என நம்புகிறது.

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இந்தோனேஷியா அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தீவுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே கடல் மாசு அதிகம் உள்ள நாடாக இந்தோனேஷியா கண்டறியப்பட்டு உள்ளது. இதனையடுத்து கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற இந்தோனேஷியா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம், மறு சுழற்சி நடவடிக்கை என பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

சாதகமான விளைவுகள் ஏதும் ஏற்படாததால் புதிய முயற்சியாக, பிளாஸ்டிக் குப்பைகள் வீசுவதை தவிர்க்கும் வகையில் இலவச பேருந்து பயண திட்டத்தை இந்தோனேஷியா அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் படி பிளாஸ்டிக் பாட்டில்களை ஒப்படைத்து விட்டு டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் இலவசமாக பயணம் செல்லலாம். இந்த திட்டம் முதன்முதலாக சுராபையா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பேருந்தில் செல்ல விரும்பும் பயணிகள் மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி நகர பேருந்தில் பயணம் செல்லலாம். 2 மணி நேர பேருந்து பயணத்திற்கு 10 பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு குறைவான தூர பயணத்திற்கு 5 பாட்டில்களை கொடுக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 250 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டால் மாதத்திற்கு சுமார் 7.5 டன் வரை சேகரிக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூதன நடவடிக்கையால் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும் என அரசு எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 

by Mani Bharathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.