LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம்

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை நந்தனத்தில்  நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்து, அவரது உரைகள் அடங்கிய நூல்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். 

விழாவில் அவர் பேசியதாவது:
சென்னை விமான நிலையம் வரும் 2024-ஆம் ஆண்டில் பயணிகள், சரக்கு போக்குவரத்து அம்சங்களில் முழு நிறைவை அடையும் என்பதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைக்கும் பணிகளைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். 

இந்தக் கழகம் செயல்பட ஏதுவாக, முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படுவர்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த "முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்' என்ற புதிய திட்டம் ஏற்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் அது கிராமப் புறங்களில் தொடங்கப்படும். தென்சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி,
பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறு தளங்களைக் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும்.

ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோமீட்டர் நீளமுள்ள மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்படும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 01 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.