பொதுவாக சில குழந்தைகள், காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளை இன்றி பிறக்கின்றன. மேலும் சிலரோ எதிர்பாராத விதமாக விபத்துகளினால் அத்தகைய உறுப்புகளை பறி கொடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக மனித கொழுப்பின் மூலம் காது, மூக்கு போன்ற உடல் பாகங்களை தயாரித்து இங்கிலாந்து நாட்டு மருத்துவர்கள் சாதனைப் புரிந்துள்ளனர்.
செயற்கை உடற்பாகங்கள் தயாரிக்கும் முயற்சியில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் மருத்துவமனை மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
மருத்துவர்களின் சீரிய முயற்சியின் விளைவாக மனிதனின் கொழுப்பை காது மற்றும் மூக்கு போன்ற வடிவங்களாக ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்த்துள்ளனர். பின்னர் அவற்றுடன் சில ரசாயன கலவைகளை சேர்த்து அவற்றை சவ்வு செல்களாக மாற்றினர். இறுதியாக செயற்கையாக வளர்க்கப்பட்ட சவ்வுப் பகுதியை தோல் பகுதியில் ஒட்டி காதுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆராச்சியின் மூலம் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மேலும் பல உறுப்புகள் தயாரிக்க இயலும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
|