இன்று நள்ளிரவில் 2014 புத்தாண்டு பிறக்கிறது. உலகம் முழுவதும் வாடிகன் உள்பட தேவாலயங்களில சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாசா விண்வெளி விஞ்ஞானிகள், விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து,தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் டைம்ஸ் ஸ்கொயர் கட்டடம் முன்பு கூடியிருக்கும் மக்களுக்கு தெரிவிக்க உள்ளனர்.
பல்வேறு முக்கிய நிகழ்வுகளை சந்தித்த கடந்த 2013 க்கு இன்று நாம் அனைவரும் விடை கொடுக்கிறோம். பழைய ஆண்டு போனதே என்ற கவலையை மறந்து பிறக்கும் புத்தாண்டில் நல்ல எண்ணங்களுடன், புதிய இலட்சியங்களுடன் வரவேற்போம் வாருங்கள்....... இந்த புத்தாண்டில் உலக மக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருக இறைவனை வேண்டிக்கொள்வோமாக..........
|