சீனாவின் சிஜியாங் மாகாணத்தில் கழிவறை பைப்பில் அடைத்து கொண்டிருந்த இரண்டுநாட்களே ஆன குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் நான்காவது தளத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த தளத்தில் இருந்தவர் பல இடங்களில் குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சத்தம் வருவதை வைத்து கழிவறை பைப்பிற்குள் குழந்தை சிக்கிகொண்டிருப்பதை அறிந்தனர். பிறகு பைப்பை உடைத்து பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஒரு பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
|