நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்-அயலாரும் பகைவரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்துவிடுவோமென்று கருதுதல்; நெய்யால் எரிநுதுப்பேம் என்ற அற்று-நெய்யை வார்த்து நெருப்பை அவிப்போமென்று கருதுவதையொக்கும். வளர்க்குங் கரணம் தளர்க்குங் கரணமாகாது என்பதாம். 'ஆல்' அசைநிலை. |
கலைஞர் உரை: |
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும். |
சாலமன் பாப்பையா உரை: |
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம். |
Translation |
With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love. |
Explanation |
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee. |
Transliteration |
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|