LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை விரட்டியடிப்போம் - நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரிக்கை !!

கோவாவில் வசிக்கும் நைஜீரிய மக்களை வெளியேற்றுவதை போலீசார் நிறுத்தவில்லை என்றால், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை அவர்களின் நாட்டிற்கு விரட்டி அடிப்போம் என நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

கோவாவில் சமீபத்தில், போலீசாருக்கும் போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கொல்லப்பட்டவரின் உடலை எடுத்துக்கொண்டு நைஜீரியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோவா தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதிததனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளையும் பறித்து போலீசாரையும் உள்ளூர் மக்களையும் மிரட்டினர். பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியேறுவோம் என மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 50 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர். 

 

இதனை அடுத்து கோவா விரைந்த, நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா, போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரிய மக்களை சந்தித்து பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கோவா போலீசார், நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம் என நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

by Swathi   on 05 Nov 2013  0 Comments
Tags: நைஜீரியா   Nigeria   Nigerian consular   நைஜீரிய தூதரக அதிகாரி           
 தொடர்புடையவை-Related Articles
நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை விரட்டியடிப்போம் - நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரிக்கை !! நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை விரட்டியடிப்போம் - நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.