LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

நில உரிமை பற்றி...

திரு . கோ . சி . மணி அவர்கள் , அமெரிக்காவில் இருந்து வந்த அன்பர்கள் முதலாளி - தொழிலாளி தாரதம்மியம் ( தர வேறுபாடு ) பற்றிச் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள் . குத்தகைதாரர்களுக்கு வசதி கிடைக்கவில்லை என்று சொன்னார்கள் . ‘ தொழிலாளர்களின் கஷ்டத்தை நீக்க வேண்டும் . தொழிலாளிகள் - நிலச்சுவான்தாரர்கள் ( நில உரிமையாளர்கள் ) இவர்கள் ஐக்கியமாக இருக்க வேண்டும் . உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்‘ என்றுதான் நிலச் சீர்திருத்தச் சட்டம் செய்யத் திட்டமிடப்பட்டது .

திரு . மணி அவர்கள் சொல்வதற்கும் முன்பே நாம் ( மாநில அரசு ) எடுத்துச் சொல்லியிருக்கிற ‘ab£ ம் . அதன் காரணமாகச் சில திட்டங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டன . குத்தகைதாரர்களுக்கு நியாயமான முறையில் அவர்களது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது . மேலும் செய்ய ஏதுவாக இருக்கிறது . நிறைவேற்றிய சட்டங்கள் சரிவர அமுல் நடத்தப்படுகின்றன . குறைகள் இருந்தால் ஆர் . டி . ஓ . விடம் ( கோட்டாட்சித் தலைவரிடம் ) ‘ பெட்டிஷன்’ போட வேண்டும் . ஆனால் , அப்படி சிலர் போடுவது இல்லை .

நிலச்சுவான்தாரரும் குத்தகைதாரரும் ஒத்துப்போனால் நாம் என்ன செய்ய முடியும் ? சில சமயங்களில் அவர்கள் ஒத்துப்போய் விடுகிறார்கள் - நிலம் கிடைக்காதே என்று அப்படி இருக்கும் போது , நாங்கள் ( மாநில அரசு ) ஒன்றும் சொல்வதற்கு இல்லை . குறிப்பிட்ட அதிகாரிகளிடம் சென்று அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் . ‘ கேப்பிட்டல் - அவுட்லே’ யில் ( முதலீட்டுத் திட்டத்தில் ) ஒதுக்கிய பணம் போதாது என்று திரு . மணி அவர்கள் சொன்னார்கள் . அரசின் சார்பில் திட்டம் போடுகிறோம் .

தொகை முன்னதாகவே செலவாகிவிட்டால் , இருக்கும் தொகையை வைத்து தொகை ஒதுக்குகிறோம் . மேலும் தேவைப்பட்டால் இதர வேலைத் தலைப்புகளில் செலவழிக்காமல் இருந்தால் , அதிலிருந்து பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது . ஒரு திட்டம் போட்டு நிதி ஒதுக்குகிறோம் . மேலும் நிதி வேண்டும் என்றால் நிதி இலாகாவைக் கேட்டு மேலும் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முன்வரும் .

இவ்வாறு அமைச்சர் கக்கன் ஆற்றிய உரையும் அளித்த பதிலும் தமது துறை பற்றி அவருக்கு இருந்த தெளிவான அறிவைப் புலப்படுத்துகின்றன .

by Swathi   on 29 Nov 2015  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
21-Nov-2020 06:17:29 Muthukumar said : Report Abuse
Putukkottai district Nila varaipatam an maps PDF file ventum
 
21-Nov-2020 06:14:13 Muniyappan said : Report Abuse
Putukkottai district Nila varaipatam an maps PDF file ventum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.