ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற இலங்கை அகதிகளின் படகு இந்தோனேஷியா கடலில் கவிழ்ந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். ஆஸ்திரேலிய நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அகதிகளுக்குரிய சலுகைகள் அதிகம் உள்ளதால், இலங்கை, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஆஸ்திரேலிய நாட்டுக்கு அதிகமாக தஞ்சம் அடைகின்றனர். குடியுரிமை சட்டங்களை கடுமையாக்கியும், இந்தோனேசியா வழியாக பலர் கள்ளதோணியில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய வருகின்றனர். இப்படி வரும்போது படகில் உள்ள ஏராளமான சுமைகளை தாங்காமல் படகு அடிக்கடி விபத்துக்குள்ளாகி பலர் இறந்து விடுகின்றனர். எனவே, படகில் வரும் அகதிகளுக்கு, இனி, ஆஸ்திரேலியாவில் இடம் இல்லை,' என, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இலங்கை, ஈராக், ஈரான் நாடுகளை சேர்ந்த, 204 பேருடன் வந்த ஒரு படகு, இந்தோனேசியாவின், ஜாவா தீவு அருகே நேற்று சுமை தாங்காமல் கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
|