|
||||||||
நியாயம் வேண்டும் |
||||||||
ஒரு வீட்டில் , நவராத்திரி கொலு சமயத்தில் , சாமிக்கு அவல் , பொரி , சுண்டல் , பொங்கல் , லட்டு , பலகாரம் எல்லாம் படைக்கப்பட்டிருந்தது . பூஜை செய்து முடித்த பிறகு , குழந்தைகளுக்கு பலகாரங்களை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தாய் திட்டமிட்டிருந்தாள் . ஒரு பையன் பலகாரத்தைப் பார்த்து ஆசையோடு “ அம்மா நான் ஒரு லட்டு எடுத்துக்கிடவா ” என்று கேட்டான் அதற்கு அம்மா , “இப்போ லட்டு சாப்பிட்டா சாமி கண்ணைக் குத்திடும், பூஜை முடியட்டும் அப்புறம் சாப்பிடலாம்”அப்படின்னாங்க. உடனே அந்தப் பையன் சாமி கண்ணைக் குத்தாதும்மா. நான் தான் ஏற்கனவே இரண்டு லட்டு சாப்பிட்டுட்டேனே என்றான். இதுதான் குழந்தைகள் இயல்பு . ஆனால் பிரசாதம் , பலகாரம் வழங்கப்படுவது கூட நியாயமாக இருக்க வேண்டும் என்று குழந்தைப்பருவத்திலேயே நினைத்தவர் பெருந்தலைவர் . பெருந்தலைவர் காமராசர் தனது சிறு வயது பருவத்தில் , ஷத்திரிய வித்தியாசாலாவில் படித்து வந்தார் . அன்று விநாயகர் சதுர்த்தி . மாணவர்களிடம் தலா ஒன்றே காலணா வசூலிக்கப்படும் . பிறகு பூஜை முடிந்த பிறகு அவல் , பொரி , தேங்காய்ச்சில் , வெல்லக்கட்டி , வாழைப்பழம் , விளாம்பழம் , பேரிக்காய் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும் . அன்றும் பூஜை முடிந்த பிறகு மாணவர்கள் கூட்டம் பிரசாதம் பெற முண்டியடித்தது . ஒரே போட்டி , மோதி தள்ளி குதித்துக் கொண்டனர் . இதனால் தலையில் குட்டும் பட்டுக் கொண்டனர் . இதனைப் பார்த்த சிறுவன் காமராசர் , ஒதுங்கி ஒரு மூலையில் ஆடாமல் , அசையாமல் , உட்கார்ந்து விட்டான் . இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் மூலைப் பிள்ளையார் என்று கேலி செய்தனர் . மாணவர் கூட்டம் குறைந்தது . கடைசியாக பிரசாதம் பெற்றார் காமராசர் . வீட்டில் அவரது தாய் “ என்ன ராஜா , வெல்லம் தேங்காய் இல்லை . உனக்குப்போடலியா என்றார் . ” எனக்கு இவ்வளவு தான் போட்டாங்கம்மா என்றார் தலைவர் . ராஜாவும் முண்டியடிச்சு முதல்லேயே பிரசாதம் வாங்கியிருக்கனும் என்று தாய் கூறியதற்கு முண்டியடிச்சு சண்டை போட்டாதான் பிரசாதம் சரியா கிடைக்குமா ? நானும் எல்லாரையும் போல காசு சரியாத்தானே கொடுத்தேன் . பொரி குறைவா போட்டது அவங்க தப்புதானே என்று தெளிவோடும் , திடமோடும் பதிலளித்தார் காமராசர் . பள்ளிப் பருவத்தில் காமராசருக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டது . அதில் ஒன்று அரசியல் பொதுக்கூட்டப்பேச்சுகள் , மற்றொன்று பத்திரிக்கை செய்திகள் . பள்ளியில் பிற சாதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பழக்கமும் உண்டு . விஸ்வகர்மா சமூகத்தைச்சேர்ந்த முத்துசாமிக்குத் தனிச்சிறப்பு உண்டு . பிற்காலத்தில் அரசியல் வாழ்க்கையிலும் இருவர் நட்பும் வளர்ந்தது . ‘எம்டன்’என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னையில் குண்டு போட்ட உலக யுத்தச் செய்தியைப் பத்திரிக்கை படித்துத் தெரிந்து கொள்வார். அந்த நேரத்தில் வந்து கொண்டிருந்த ஒரேதமிழ்ப் பத்திரிக்கையான சுதேசமித்திரனைத் தவறாது படிப்பதில் ஆர்வம் காட்டினார். பொது விஷயங்களில் வயதுக்கு மீறிய ஆர்வம் இருந்தாலும் , அந்த நேரத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சரித்திரம் , பூகோளம் , ஆங்கிலம் போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள்பெற்று நல்ல மாணவராகவும் திகழ்ந்தார் . |
||||||||
by Swathi on 20 Aug 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|