|
|||||
என்.எல்.சி- இந்திய நிலக்கரி நிறுவனம் இணைந்து 5000 மெ.வா. மின் உற்பத்தி செய்ய முடிவு! |
|||||
என்.எல்.சி நிறுவனத்துடன், இந்திய நிலக்கரி நிறுவனம் இணைந்து 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டங்களையும், 2 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திட்டங்களையும், அமைக்க முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இதில் மகா ரத்னா தகுதி பெற்ற இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து மின் சக்தியும், பசுமை ஆற்றல் எனப்படும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களில் பெறும் வகையில் அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து 50: 50 சதவீத முதலீட்டில் ஒரு கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்.எல்.சி நிறுவனம் தனது 62வது ஆண்டுகால பணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4240 மெகாவாட் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியில் செயல்படும் அனல்மின் நிலையங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா நகரில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டங்களை செயல்படுத்த ஒரு கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. என்.எல்.சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தலைவர் அனில்குமார் ஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்எல்சி இயக்குநர் நாதெள்ள நாகமகேஷ்வர் ராவ் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தொழில்நுட்ப துறை இயக்குனர் பினய் தயாள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|