LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

என்.எல்.சி- இந்திய நிலக்கரி நிறுவனம் இணைந்து 5000 மெ.வா. மின் உற்பத்தி செய்ய முடிவு!

என்.எல்.சி நிறுவனத்துடன், இந்திய நிலக்கரி நிறுவனம் இணைந்து 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா  நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து   3 ஆயிரம்  மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டங்களையும், 2 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திட்டங்களையும்,  அமைக்க முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.

 இதில்  மகா ரத்னா தகுதி பெற்ற இந்திய நிலக்கரி  நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் தேவையான  அனைத்து மின் சக்தியும், பசுமை ஆற்றல் எனப்படும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களில்  பெறும் வகையில் அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. 

இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து 50: 50  சதவீத  முதலீட்டில் ஒரு கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் என்.எல்.சி  நிறுவனம் தனது 62வது ஆண்டுகால பணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4240 மெகாவாட் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியில் செயல்படும்  அனல்மின் நிலையங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தா நகரில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டங்களை  செயல்படுத்த ஒரு கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான  ஒப்பந்தம் கையெழுத்தானது. 

என்.எல்.சி  நிறுவன தலைவர்  ராகேஷ்குமார் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தலைவர்  அனில்குமார்  ஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் என்எல்சி  இயக்குநர் நாதெள்ள  நாகமகேஷ்வர் ராவ்  மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தொழில்நுட்ப துறை இயக்குனர் பினய் தயாள்  ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.