LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!

மானிய விலையில் காஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

சிவகாசி, நாராயணபுரத்தை சேர்ந்த ஆனந்த முருகன் என்ற வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றை பதிவு செய்தார். அந்த மனுவில், சில மாதங்களுக்கு முன்பு அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்புபடி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால் மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.  ஆதார் அட்டை கேட்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என ஆனந்த முருகன் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

 

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில், இறுதி உத்தரவு வரும் வரை, ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்தனர். மேலும் விசாரணை, ஜனவரி, 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது எனக் கூறினர். 

by Swathi   on 23 Jan 2014  0 Comments
Tags: No Aadhaar   Aadhaar Card   Subsidy Gas Cylinder   Gas Cylinder   Madurai High Court   மானிய காஸ் சிலிண்டர்   ஆதர் அட்டை  
 தொடர்புடையவை-Related Articles
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !! மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
டீசல் விலையை ரூ.1 ம், சிலிண்டர் விலையை ரூ 10 ம் மாதம் தோறும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை !! டீசல் விலையை ரூ.1 ம், சிலிண்டர் விலையை ரூ 10 ம் மாதம் தோறும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை !!
உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !! உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.