|
|||||
ஐ.பி.எல் சூதாட்டத்தில் குருநாத்துக்கும், ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பில்லை - சொல்கிறது நீதிபதிகளின் அறிக்கை ! |
|||||
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன்
ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விசாரணை கமிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த ஆறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன்
மற்றும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான குற்றசாட்டு குறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம்
சவுதா, ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிசன் தனது அறிக்கையை நேற்று வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக,கூறப்பட்டுள்ள ராஜ்குந்த்ராவுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் சூதாட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விசாரணை கமிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 28 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|