டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், ரயில் கட்டணம் உயராது என மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசியதாவது, தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் இன்னும் எட்டு மாதங்களில் முடிய இருப்பதால் ரயில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், டீசல் விலை உயர்த்தப்பட்டாலும், ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படாது, மேலும் கூடுதல் செலவை மத்திய அரசே ஏற்கும் என அவர் தெரிவித்தார்.
|