பேருந்துகளில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதால், இதனைத்தடுக்கும் வகையில், பேருந்துகளில், பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறு செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, பேருந்துகளில், பெண்களுக்கு பாதுகாப்பான இடம், கண்காணிப்பு கேமரா, கூடுதல் பணியாளர்கள், பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை மாநில அரசுகள் கண்காணித்து ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தின், மைசூரு நகர பேருந்துகளில் மட்டும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநில அரசுகள், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாதை கண்டித்த மத்திய அரசு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற மறுசீரமைப்பு கொள்கை திட்டத்தின் படி, மாநில அரசுகளுக்கு புதிய பேருந்துகளை வழங்க முடியாது என, கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
|