ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, பின் ரத்து செய்து செய்யாவிட்டால் அவர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித் தரப்பட மாட்டது என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. மேலும் வரும் ஒன்றாம் தேதி முதல், குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அதில் குறைவானவர்களே பயணம் செய்தாலும் பணம் திரும்பித்தர முடியாது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே சமயம், முன்பதிவு செய்து விட்டு ஆர்.ஏ.சி.,யில் குறைந்த வசதிகளுடன் பயணம் செய்ய நேர்ந்தாலோ அல்லது ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யாவிட்டாலும், ரயில்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது பயணிக்க இருக்கை வசதி தரப்படாமல் போனாலோ அல்லது ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலோ அந்த பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித்தரப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட்டிற்கான பணத்தில் 50 சதவீதம் வரை திருப்பி தரும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|