LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை என்ற அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்துவது என்பது பொருளாதார மேம்பாட்டை சீரழிக்கின்ற ஒரு பிற்போக்கு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.  டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடி. டீசல் விலை உயர்வு என்பது அனைத்து பொருட்களின் விலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதேபோன்று பெட்ரோலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவியர்; அலுவலகங்களுக்குச் செல்வோர்; இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள். பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

 

இது தவிர, சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த இந்த டீசல் விலை உயர்வு வழி வகுக்கும். இவற்றிற்கெல்லாம் மேலாக, குறைந்த கட்டணத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையினைச் சந்திக்க நேரிடும். மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் நலன் கருதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற திடமான முடிவுடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

 

ஏற்கெனவே பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக, இந்த விலை உயர்வையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரத்தையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். 

by Swathi   on 03 Jan 2014  0 Comments
Tags: பேருந்து கட்டணம்   பெட்ரோல் டீசல் விலை   இன்றைய பெட்ரோல் விலை   இன்றைய டீசல் விலை   தமிழக பேருந்து கட்டணம்   Tamilnadu Government Bus Fare   Bus Fare  
 தொடர்புடையவை-Related Articles
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !! பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.