அமைதிக்கான நோபல் பரிசு 2021
2021-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். கருத்து சுதந்திரத்தினை பாதுகாக்க இருவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசினை இவ்விருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
நோபல் பரிசுக் குழு இவர்களைக் குறித்து, மரியா ரெஸ்ஸா தனது சொந்த நாடான பிலிப்பைன்சில் வளரும் சர்வாதிகாரம்,அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை அம்பலப்படுத்த தனது கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியுள்ளார். டிமிட்ரி முரடோவ் ரஷ்யாவில் பல ஆண்டுகளாக சவாலான சூழ்நிலையில் கருத்து சுதந்திரத்தினை பாதுகாத்து வந்தார் என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
|