முஸ்லிம்களை தவிர வேறுயாரும் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என மலேசிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசியாவிலிருந்து வெளிவரும், ஹெரால்ட் என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, "அல்லா' என்ற சொல்லை, தனது இதழில் பயன்படுத்தி வந்தது. இதனை எதிர்த்த முஸ்லிம்கள், அங்குள்ள தேவாலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மலேசிய நீதிமன்றம் மலேசியாவில் உள்ள கிறிஸ்தவ பத்திரிகைகள் 'அல்லா' என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என கடந்த 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று, விசாரித்தது. "முஸ்லிம் அல்லாதவர்கள், "அல்லா' என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது'என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
|