|
||||||||
ஓட்ஸ் பொங்கல் (oats pongal) |
||||||||
தேவையானவை: ஓட்ஸ் - 1 கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) - 1/2 கப் இஞ்சி - ஒரு துண்டு பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை உப்பு - 1/2 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது முந்திரிப்பருப்பு - சிறிது செய்முறை: 1.இஞ்சியின் தோலை சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். 3.வெறும் கடாயில் ஓட்ஸ், பயத்தம் பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்தெடுக்கவும். 4.பிரஷர் குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு வேகவைத்து எடுக்கவும். 5.சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும். 6.ஒரு கடாயில் நெய் சூடானவுடன், அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|