உலக நாடுகளை கணினி மூலம் அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன். முன்னாள் உளவுத்துறை கணினி ஊழியரான இவரை கைது செய்ய அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்னோடெனுக்கு ரஷ்ய அரசு அடைக்களம் கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா ரஷியா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ரஷ்யா, அமெரிக்க நாடுகளிடையே கைதிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், ஒரு நாட்டின் சட்டத்தை மற்ற நாடு மதிப்பது இரு நாடுகளின் வழக்கமாக இருந்து வந்தது. இதுவரை ரஷியா எங்களிடம் இப்படி நடந்துகொண்டதில்லை. இருந்தாலும் ரஷியாவுடனான உறவு இன்னும் முறிந்துவிடவில்லை. இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷியா செல்லயிருக்கிறேன்.உலக பொருளாதார சக்திகள் பங்குபெறும் முக்கியமான மாநாடு அது. அந்த மாநாடு ரஷியாவில் நடந்தாலும், உலகின் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழும் அமெரிக்கா அதில் கலந்து கொள்வது அவசியம் என்பதால் அங்கு செல்கிறேன் என்று ஒபாமா தெரிவித்தார். மேலும் ரஷியாவில் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஜி -20 மாநாட்டில் மாநாட்டில் மட்டும் கலந்து கொள்கிறார் என்றும், ஆனால் ரஷ்ய அதிபர் புதினை தனியாக சந்தித்து பேசும் திட்டத்தை அவர் ரத்து செய்து உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
|