LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

கடலும் கரையும் - கவிதை

அலையடிக்கும் கடல்
அதனருகே
நீண்ட பெரு மணற்காடு.

குருஷேத்திரத்துப் போர்க்காட்சி போல
விம்மித் தணிந்த அலைகளோ
தரையை
ஓர் முறை தழுவி,
வெட்க முற்றுப்
பின்னே வேகமாய்த் திரும்பின.

இந்தக் கரையின் மணற் பரப்பினிலே
இலந்தை மரங்கள்.
இந்த மரங்களின்
உச்சியில் ஏறினால்
இராமேஸ்வரத்தின் ஓர் முடி தொ¢யுமாம்.
அவ்வளவு நெருக்கம்.
இதுவும் அதுவும் ஒன்றாய் இருந்து
இடையே கடலால் அ¡¢யுண்டு போனதாய்
பூமிசாத்திர வல்லுனன் ஒருவன் போல்
தாத்தா,
அனுபவ முதிர்ச்சியில் சொல்லுவார்.
இந்தக் கடலின் நீண்ட பரப்பில்
நீந்திப் பழகி
இறால்கள் - மீன்கள் - கடல்படு திரவியம்
சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம்
தாத்தாவோடு அற்றுப் போயிற்று!

காட்டுக் குதிரை கனைக்கும் வேளை
வயிற்றுப் பிழைப்பை மனதிற் கொண்டு
மனைவியைத் கரையே
காவல் வைத்து,

கடலில் சென்ற காளைகள்
எல்லை தாண்டிய புலிகளாய்
மீண்டும் திரும்புதல் இல்லை.

தாத்தா,
அவரது தாத்தா
அதற்கு முன்பு இருந்த பரம்பரை
நிமிர்ந்து கிடக்கும்
இந்தக் கடலிற் தான்
நம்பிக்கையுற்றுக் கிடந்தது.

இன்று,
கொலம்பஸ் கண்ட யுஅத்திலாந்திக்ருகாய்
'சமுத்திர விழுங்கிகள்' நிறைந்து,

இப்போதெல்லாம்
இலந்தை மரத்தின் உச்சியிலேறினால்
இராமேஸ்வரத்தின் முடி தொ¢யாது;
நீல நிறத்தில்
கடற்படைக் கப்பல்கள்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.