இந்தியாவின், ஓடிஸா மாநிலத்தில் பேசப்படும் ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், செம்மொழி அந்தஸ்து பட்டியலில், ஒடியா மொழியையும் இணைக்க வேண்டும் என்ற, அம்மாநிலத்தவரின், நீண்ட கால கோரிக்கையை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒடியாவுக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதை ஒடிசா மாநிலத்தவர் வரவேற்று உள்ளனர்.
|