ஒரு கோடி மதிப்பிலான அரசு அருங்காட்சியகம் வேங்கிக்காலில் திறப்பு
தமிழகத்தின் 22வது அருங்காட்சியகம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறை மூலம் ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் சமூகம் பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல் உட்பட 7 வகையான வரலாறுகள் போன்றவை வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் சந்தீப்நந்தூரி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
|