LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

ஒரு குலைப்பழமும் ஒரு ரூபாயும்

 

தன்னோட வீட்டுக் கொல்லையில சில வாழைக்கன்ணுகளை நட்டிருந்தாரு அழகப்பன்.
மலை வாழை, நேந்திரன், பாளையங்கோடன், பூவன்ணு பல்வகை வாழைக்கன்றுகளைப் பார்த்துப் பார்த்து வாங்கி நட்டிருந்தாரு..
நீர்ப் பாய்ச்சுவார். தேவையான போது பச்சிலை உரமிடுவார். தன்னோட புள்ளைகளைப் பாக்கற மாதிரி வாழைக்கன்றுகளையும் கவனிச்சு வந்தாரு.. இவ்வளவு ஏன்? நாளும் வாழைககூட பேசவும் செய்வாரு.
அப்பா வாழைக் கன்றுகளை இந்த அளவுக்கு நேசிப்பது அவருடைய பிள்ளைகளான சுந்தருக்கும், சுந்தரிக்கும் தெரியும். அவரோட மனைவி அழகம்மாளுக்குத் தெரியும். 
கூடவே அழகம்மாளுக்கு வேறொண்ணும் தெரியும். வாழையிலெ எத்தனை குலை வரும்? ஒரு குலையில எத்தனை காய் காய்க்கும்? ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய்ணு வச்சுகிட்டா ஒரு குலைக்கு எத்தனை ரூபாய் கிடைக்கும்? அப்படி பத்து குலைகள் கிடைச்சா மொத்தம் எத்தனையாகும்? '' அப்படீண்ணு தன் புருஷன் இப்ப இருந்தே கணக்குப்போட தொடங்கிட்டாருங்கறதும் அழகம்மாளுக்குத் தெரியும்.
ஒரு நாள்....
" சுந்தர், சுந்தரி... ஓடி வாங்க...''  அழகப்பன் கூப்பிடற சத்தம் கேட்டு ரெண்டுபேரும் கொல்லைப் புறத்தை நோக்கி ஓடினாங்க.
'' பாருங்க... நம்ம வாழை குலை தள்ளீருச்சு..''  அப்படீண்ணு சின்னக் குழந்தையைப் போலத் துள்ளினாரு அழகப்பன். "இன்னும் சில நாளிலெ இதுல நிறைய காய் காய்க்கும். காய்க பழுக்கும். ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய்ண்ணு இந்தக் குலையை விக்கலாம். நமக்கு நெறையப் பணம் கிடைக்கும்''  அப்டீண்ணு கண்ணப் பெரிசா விரிச்சபடி சொன்னாரு
மலை வாழை ஒண்ணு நீளமாக குலை தள்ளியிருந்துச்சு. நாளாக நாளாக சீப்புச் சீப்பாக காய்க வந்துச்சு. காய்கள் காய்த்துப் பெரிசாச்சு. சில சீப்புகளிலெ சில காய்கள் மெல்ல கனியத் தொடங்கிச்சு. பச்சை நெறம் மெல்ல மஞ்சளாக மாறத் தொடங்கிச்சு
.
அழகப்பன் கொடுவாளை எடுத்துக்கிட்டு கொல்லைப் புறத்துக்கு நடந்தார். கூடவே குழந்தைகளும் சேர்ந்துகிட்டாங்க. குழந்தைகள் பழக்குலையிலுள்ள பழத்தை ஆசையாகப் பார்த்தாங்க. ஆனால் அழகப்பன் அதைக் கண்டுக்கவேயில்லை.
குலையை வெட்டினார். ஒரு சாக்குப் பைக்குள் நொழைச்சாரு. வீட்டிக்குள்ளே கொண்டுவந்து தொங்கவிட்டாரு. நாலஞ்சு நாளாச்சு. பழவாசம் மூக்கைத் துளைச்சுது. சாக்குப் பையை மெல்ல நீக்கிப் பாத்தான் சுந்தர். சொல்லிவச்ச மாதிரி அத்தன பழங்களும் மஞ்சள் நிறத்தில் தகதகண்ணு ஜொலிக்குது..
அவனோட வாயிலெ கப்பலே விடலாம். அத்தனை எச்சில் ஊறிச்சு. பழத்தைப் பறிக்க அவன் கை நீண்டுது. ஆனால் அப்பா திட்டுவாரேண்ணு நெனச்சு கையைப் பின்னுக்கு இழுத்துகிட்டான்.. தன் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்து காட்டினான். ஊறி வந்த எச்சிலை விழுங்கறதைத் தவிர அவளுக்கும் வேறு வழியில்லையே.
அழகப்பன் குலையை விக்கறதுக்கு ஆளு தேடினாரு. ஒண்ணு ரெண்டு பேரு வந்தாங்க. ஆனா அவங்க எல்லோரும் குறைஞ்ச விலைக்கு குலையைக் குடுங்க அப்படீண்ணு கேட்டாங்க.  அழகப்பனோ.. குலையிலெ மொத்தம் நூற்றம்பது பழங்கள் இருக்கு. நூற்றம்பது பழத்துக்கு நூற்றைம்பது ரூபாய் தரணும்ணு கேட்டாரு. 
அதனாலெ வாங்க வந்தவங்களும் வாங்காம திரும்பிப் போனாங்க அழகப்பன் என்ன செய்யறதுண்ணு யோசிச்சாரு. பழமோ நல்லா பழுக்கத் தொடங்கியிருச்சு. சட்ணு அவர் மனத்தில் ஓர் யோசனை உதிச்சுது.
" அடுத்தவங்களுக்கு ஏன் விக்கணும்? நாமே வியாபாரம் செஞ்சா என்ன? '' அப்படீண்ணு நெனச்சாரு.
" சுந்தர், சுந்தரி இங்கே வாங்க....''  ண்ணு புள்ளகள கூப்பிட்டாரு.. ஒரு மூங்கில் கம்பை எடுத்தாரு ரெண்டு பேரோட தோள் மேலெ வைச்சாரு. பழக்குலையை அந்த கம்போடு நடுவிலெ கட்டித் தொங்கவிட்டாரு.
" பிள்ளைகளே..."பழம் பழம்ணு''  கூவிக்கிட்டே வீதி வீதியாகச் போங்க. நீங்கள் கூவறதைக் கேட்டு மக்கள் பழம் வாங்க வருவாங்க.. பழம் என்ன விலைண்ணு கேட்பாங்க. ஒரு பழம் ஒரு ரூபாய்ணு சொல்லுங்க. யாராவது குறைஞ்ச வெலைக்குக் கேட்டா கொடுக்காதீங்க '' அப்படீண்ணார்.
புள்ளகளும் சரீப்பாண்ணு சொல்லீட்டு பழக்குலையைச் சொமந்தபடி நடக்கத் தொடங்கினாங்க. "இருங்க இருங்க... இந்தா இந்த ஒரு ரூபாயை வைச்சுக்குங்க. யாராச்சும் ரெண்டு ரூபாய் தந்துட்டு ஒரு பழம் வேணும்ணு கேட்டா பாக்கி கொடுக்கணுமில்லையா''  அப்டீண்ணு ஒரு ரூபாய் காசை சுந்தரோட சட்டைப் பைக்குள் போட்டாரு.
புள்ளைகள் இருவரும் நடக்கத் தொடங்கினாங்க. நெறைய வீடுக உள்ள தெருவைப் போய்ச் சேரறதுக்குள்ளே அவங்களுக்குப் போதும் போதும்ணு ஆயிருச்சு.
"அண்ணா தோள் வக்குது..பசிக்கவும் செய்யது.. இந்தப் பாலத்தில் கொஞ்சம் நேரம் உட்காந்திட்டு அப்புறம் போகலாம்ணு சொன்னா சுந்தரி.
"சரி, அப்படியே செய்யலாம்'' அப்படீண்ணான் சுந்தர். ரெண்டு பேரும் பாலத்தில் உக்காந்தாங்க. பழக்குலையிலுள்ள பழங்க சூரியவெளிச்சத்திலெ தகதகண்ணு மின்னுது. ரெண்டு பேரும் பழங்களை ஆசை அசையாகப் பார்த்தாங்க. ஆனால் சாப்பிட முடியாதே!
சட்டெனச் சட்டைப் பைக்குள் கையை விட்டான் சுந்தர். அதுக்குள்ள கிடந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான். "சுந்தரி, ஒரு பழம் என்ன விலை?'' ண்ணு கேட்டான்.
" என்ன ஏன் கேக்கறே? ஒரு பழம் ஒரு ரூபாய்ணு உனக்குத் தெரியாதா?'' சுந்தரி எதிர்க் கேள்வி கேட்டாள்.
"இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் தா '' ஒரு ரூபாய் காசை நீட்டிகிட்டு கேட்டான் சுந்தர்.
 
சுந்தரி அந்த காசை வாங்கி வச்சுகிட்டு ஒரு பழத்தைப் பிச்சுக் கொடுத்தாள். அவன் சாப்பிடறதையே கொட்டக் கொட்ட பாத்தபடி உட்காந்திருந்தா..
அவன் சாப்பிட்டு முடிச்சதும் "இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் கொடு''  அதே காசை சுந்தருக்கிட்ட நீட்டிகிட்டே கேட்டாள் சுந்தரி. காசை வாங்கி வச்சுகிட்டு பழத்தைப் பிச்சுக் கொடுத்தான் சுந்தர்.
இந்த விளையாட்டு நடந்துகிட்டே இருந்துச்சு. சாயங்காலமாச்சு. ரெண்டுபேரும் வீட்டுக்குப் புறப்பட்டாங்க..
புள்ளைக வர்றதை தூரத்திலிருந்தே பார்த்த அழகப்பன் ஓடோடி வந்தாரு. குலையில் ஒரு பழம் கூட இல்லாததைப் பாத்து ரொம்ப சந்தோஷமானாரு. சுந்தர் சட்டைப் பைக்குள் கையை விட்டான். அதே ஒரு ரூபாக் காசை அவருகிட்ட நீட்டினான்.
அழகப்பன் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டாரு.

 

தன்னோட வீட்டுக் கொல்லையில் சில வாழைக்கன்றுகளை நட்டிருந்தார் அழகப்பன். மலை வாழை, நேந்திரம், பாளையங்கோடன், பூவன்ணு பல்வகை வாழைக்கன்றுகளைப் பார்த்துப் பார்த்து வாங்கி நட்டிருந்தார்.. நீர்ப் பாய்ச்சுவார். தேவையான போது பச்சிலை உரமிடுவார். தன்னோட குழந்தைகளை  போல் வாழைக்கன்றுகளையும் கவனிச்சு வந்தார்.. இவ்வளவு ஏன்? நாளும் வாழைகளுடன் பேசவும் செய்வார். 


அப்பா வாழைக் கன்றுகளை இந்த அளவுக்கு நேசிப்பது அவருடைய பிள்ளைகளான சுந்தருக்கும், சுந்தரிக்கும் தெரியும். அவரோட மனைவி அழகம்மாளுக்குத் தெரியும்.  கூடவே அழகம்மாளுக்கு வாழையிலையில் எத்தனை குலை வரும்? ஒரு குலையில் எத்தனை காய் காய்க்கும்? ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு குலைக்கு எத்தனை ரூபாய் கிடைக்கும்? அப்படி பத்து குலைகள் கிடைத்தால் மொத்தம் எத்தனையாகும்? '' அப்படீண்ணு தன் புருஷன் இப்ப இருந்தே கணக்குப்போட தொடங்கிட்டாருங்கறதும் அழகம்மாளுக்குத் தெரியும். 


ஒரு நாள்.... 


"
சுந்தர், சுந்தரி... ஓடி வாங்க...'' என்று அழகப்பன் கூப்பிடற சத்தம் கேட்டு இரண்டுபேரும் கொல்லைப் புறத்தை நோக்கி ஓடினாங்க. '' பாருங்க... நம்ம வாழை குலை தள்ளீருச்சு..''  அப்படீண்ணு சின்னக் குழந்தையைப் போலத் துள்ளினாரு அழகப்பன். "இன்னும் சில நாளில் இதிலிருந்து நிறைய காய் காய்க்கும். காய்கள் பழுக்கும். ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய்ண்ணு இந்தக் குலையை விற்க்கலாம். நமக்கு நிறையப் பணம் கிடைக்கும்''  என்று கண்னை பெரிதா விரிச்சபடி சொன்னாரு மலை வாழை ஒன்று நீளமாக குலை தள்ளியிருந்தது. நாளாக நாளாக சீப்புச் சீப்பாக காய்கள் வந்தது. காய்கள் காய்த்துப் பெரிதனது. சில சீப்புகளில் சில காய்கள் மெல்ல கனியத் தொடங்கியது. பச்சை நிறம் மெல்ல மஞ்சளாக மாறத் தொடங்கியது.அழகப்பன் கொடுவாளை எடுத்துக்கிட்டு கொல்லைப் புறத்துக்கு நடந்தார். கூடவே குழந்தைகளும் சேர்ந்து கொண்டார்கள். குழந்தைகள் பழக்குலையிலுள்ள பழத்தை ஆசையாகப் பார்த்தார்கள். ஆனால் அழகப்பன் அதைக் கண்டுக்கவேயில்லை.


குலையை வெட்டினார். ஒரு சாக்குப் பைக்குள் நுழைத்தார். வீட்டிக்குள் கொண்டுவந்து தொங்கவிட்டார். நாலைந்து நாட்கள் கழித்து. பழவாசம் மூக்கைத் துளைத்தது. சாக்குப் பையை மெல்ல நீக்கிப் பாத்தான் சுந்தர். சொல்லிவைத்த மாதிரி அத்தனை பழங்களும் மஞ்சள் நிறத்தில் தகதக என்று ஜொலிக்குது..


அவனோட வாயிலிலே கப்பலே விடலாம். அத்தனை எச்சில் ஊறியது. பழத்தைப் பறிக்க அவன் கையே நீண்டுது. ஆனால் அப்பா திட்டுவார் என்று நினைத்து கையைப் பின்னுக்கு இழுத்து கொண்டான்.. தன் தங்கச்சியையும் கூட்டி கொண்டு வந்து காட்டினான். ஊறி வந்த எச்சிலை விழுங்கறதைத் தவிர அவளுக்கும் வேறு வழியில்லையே.


அழகப்பன் குலையை விக்கறதுக்கு ஆளு தேடினார். ஒண்ணு இரண்டு பேரு வந்தாங்க. ஆனா அவங்க எல்லோரும் குறைஞ்ச விலைக்கு குலையைக் கேட்டாங்க.  அழகப்பனோ.. குலையில் மொத்தம் நூற்றைம்பது பழங்கள் இருக்கு. நூற்றைம்பது பழத்துக்கு நூற்றைம்பது ரூபாய் தரணும்ணு கேட்டார்.  அதனால் வாங்க வந்தவர்களும் வாங்காம திரும்பிப் போனாங்க அழகப்பன் என்ன செய்யுறது என்று யோசித்தார். பழமோ நல்லா பழுக்கத் தொடங்கியது. அவர் மனத்தில் ஓர் யோசனை உதித்தது.

"
அடுத்தவங்களுக்கு ஏன் விற்க்கனும்? நாமே வியாபாரம் செய்தால் என்ன? ''என்று நினைத்தார்.


"
சுந்தர், சுந்தரி இங்கே வாங்க....''  என்று கூப்பிட்டார்.. ஒரு மூங்கில் கம்பை எடுத்தார் இரண்டு பேரோட தோள் மேல் வைத்தார். பழக்குலையை அந்த கம்போடு நடுவில் கட்டித் தொங்கவிட்டார்.


"
பிள்ளைகளே..."பழம் பழம் என்று''  கூவிக்கிட்டே வீதி வீதியாகச் போங்க. நீங்கள் விற்பதை கேட்டு மக்கள் பழம் வாங்க வருவாங்க.. பழம் என்ன விலை என்று கேட்பாங்க. ஒரு பழம் ஒரு ரூபாய் என்று சொல்லுங்க. யாராவது குறைந்த விலைக்குக் கேட்டால் கொடுக்காதீர்கள் '' என்றார்.


பிள்ளகளும் சரி என்று  சொல்லிவிட்டு பழக்குலையைச் சுமந்தபடி நடக்கத் தொடங்கினார்கள். "இருங்க இருங்க... இந்தா இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள். யாராச்சும் இரண்டு ரூபாய் தந்துட்டு ஒரு பழம் வேணும் என்று  கேட்டால் பாக்கி கொடுக்கணுமில்லையா''  என்று ஒரு ரூபாய் காசை சுந்தரோட சட்டைப் பைக்குள் போட்டார்.


பிள்ளைகள் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். நிறைய வீடுகள் உள்ள தெருவைப் போய்ச் சேர்வதர்க்குள்ளே அவங்களுக்குப் போதும் போதும்ணு ஆயிவிட்டது.


"
அண்ணா தோள் வலிக்குது..பசிக்கவும் செய்யுது.. இந்தப் பாலத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு அப்புறம் போகலாம்ணு சொன்னாள் சுந்தரி.


"
சரி, அப்படியே செய்யலாம்'' என்றான் சுந்தர். இரண்டு பேரும் பாலத்தில் உக்கார்ந்தாங்க. பழக்குலையிலுள்ள பழங்க சூரியவெளிச்சத்தில் தகதகண்ணு மின்னியது. இரண்டு பேரும் பழங்களை ஆசை ஆசையாகப் பார்த்தாங்க. ஆனால் சாப்பிட முடியாதே!
சட்டெனச் சட்டைப் பைக்குள் கையை விட்டான் சுந்தர். அதுக்குள்ளே இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான். "சுந்தரி, ஒரு பழம் என்ன விலை?'' என்று கேட்டான்.


"
என்ன ஏன் கேட்கிறாய்? ஒரு பழம் ஒரு ரூபாய்ணு உனக்குத் தெரியாதா?''என்று சுந்தரி எதிர்க் கேள்வி கேட்டாள்.


"
இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் தா '' ஒரு ரூபாய் காசை நீட்டி கேட்டான் சுந்தர். சுந்தரி அந்த காசை வாங்கி கொண்டு ஒரு பழத்தைப் கொடுத்தாள். அவன் சாப்பிடறதையே பாத்தபடி உட்காந்திருந்தாள்..


அவன் சாப்பிட்டு முடிச்சதும் "இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் கொடு''  அதே காசை சுந்தருக்கிட்ட நீட்டிகிட்டே கேட்டாள் சுந்தரி. காசை வாங்கி வச்சுகிட்டு பழத்தைப் பிச்சுக் கொடுத்தான் சுந்தர்.


இந்த விளையாட்டு நடந்துகிட்டே இருந்துதது. சாயங்காலமானது. இரண்டுபேரும் வீட்டுக்குப் புறப்பிட்டார்கள்.


பிள்ளைகள் வருகிற தூரத்திலிருந்தே பார்த்த அழகப்பன் ஓடோடி வந்தார். குலையில் ஒரு பழம் கூட இல்லாததைப் பாத்து ரொம்ப சந்தோஷமானார். சுந்தர் சட்டைப் பைக்குள் கையை விட்டான். அதே ஒரு ரூபாக் காசை அவருகிட்ட நீட்டினான்.


அழகப்பன் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டார்.

 

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.