தேவையானவை:
துவரம் பருப்பு - 100 கிராம் வெங்காயம் - 200 கிராம் சாம்பார் போடி - 2 ஸ்பூன் மஞ்சள் போடி - சிறிது பெருங்காயம் - சிறிது கருவேப்பிலை - 1 பச்சை மிளகாய் - 2 கடுகு - 1 /2 ஸ்பூன் உளுந்து - 1 /2 ஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிது
தக்காளி - 1 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
1.துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும் . 2.அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து தாளிக்கவும். 3.பிறகு வெங்காயம், கருவேப்பிலை ,மிளகாய்,பெருங்காயம் எல்லாத்தையும் வதக்கவும் . 4.நன்றாக வதங்கியதும் தக்காளி ,உப்பு சேர்த்து வதக்கவும். 5.பிறகு சிறிது மஞ்ச போடி,சாம்பார் போடி சேர்த்து கொதிக்கவிடும்.நன்றாக கொதித்தவுடன் வெந்த பருப்புபை சேர்க்கவும். 6.கடைசியில் புளி கரைசலை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்க்கவும். இப்பொழுது சுவையான வெங்காய சாம்பார் ரெடி
|