LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ஓகார வருக்கம்

 

ஓண மெனும்பெயர் மாதவ னாளும்
வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்
அவர்விளை யாடலும் விளையாடு கலனும்
இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்
மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும்
புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்
கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்
சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்
நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்
பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்
ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்
ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347

 

ஓண மெனும்பெயர் மாதவ னாளும்

வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335

 

ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்

அவர்விளை யாடலும் விளையாடு கலனும்

இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336

 

ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்

மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337

 

ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்

யானை நுதலணி பட்டமும் கிடங்கும்

ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338

 

ஒதை யெனும்பெயர் சத்த வொலியும்

புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்

நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339

 

ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்

அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்

கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340

 

ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்

சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341

 

ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்

ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342

 

ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343

 

ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்

நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344

 

ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்

கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345

 

ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்

பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்

ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346

 

ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்

ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.