|
||||||||
ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து |
||||||||
நிலாவே! இன்று நான்
பாடல் எழுதமாட்டேன்
ஒரு தற்காலிக வீட்டில்
சொந்தமாய் வாசலில்லை
உரிமையோடு பூப்பறித்து முகர
ஒரு மரமில்லை.
நீகூட எனக்கு ஓர் அந்நிய நிலவுதான்.
எனது வாசலில் விழுகின்ற உன்னுடைய வௌிச்சமும்
இந்த அந்நிய வாசல் ஒளியும்
எனக்குள்ளே பேதத்தைக் கிளப்பி மனநிலையைக் கெடுக்கிறது.
நான் மூன்று தினங்களாய் அகதி.
இந்த உயிரையும், அதற்குள்ளே ஊறுகின்ற கவிதையையும்
காப்பாற்றி வெற்றிகண்ட ஒருவன்.
என் வீட்டைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்
அது மூக்குடைந்து விட்டதாய்.
நான் நேசித்து வளர்த்த பூமரங்கள் எல்லாம்
மாட்டின் மலக் குடலில்
தங்கிப் பின்னர் வௌியேறி விட்டதென்றும்
அறிகிறேன்.
இங்கே-
சொந்த வானமில்லை.
நான் சுவாசிக்கின்ற காற்றுக்கூட
இன்னொரு வீட்டாரின் உடைமைபோல் இருக்கிறது.
எப்படிப் பாடல் எழுதுவேன் நிலவே?
தொண்ணூறாயிரம் வெள்ளிகளையும், உன்னையும் வானத்தையும்
தொலைத்த நிலையில்,
என் வண்ணத்துப் பூச்சியையும்
கட்டிலின் இடவில் வாழ்ந்த பல்லியையும்
இழந்த நிலையில்?
நீ மேகத்தை எடுத்து முகத்தை மூடிக்கொள்
கவிஞன் பெருமூச்சு விட்டால்
குளிர் தென்றலும் கருகும்.
நிலாவே! இன்று நான் பாடல் எழுதமாட்டேன்
ஒரு தற்காலிக வீட்டில் சொந்தமாய் வாசலில்லை உரிமையோடு பூப்பறித்து முகர ஒரு மரமில்லை.
நீகூட எனக்கு ஓர் அந்நிய நிலவுதான். எனது வாசலில் விழுகின்ற உன்னுடைய வௌிச்சமும் இந்த அந்நிய வாசல் ஒளியும் எனக்குள்ளே பேதத்தைக் கிளப்பி மனநிலையைக் கெடுக்கிறது.
நான் மூன்று தினங்களாய் அகதி. இந்த உயிரையும், அதற்குள்ளே ஊறுகின்ற கவிதையையும் காப்பாற்றி வெற்றிகண்ட ஒருவன்.
என் வீட்டைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள் அது மூக்குடைந்து விட்டதாய். நான் நேசித்து வளர்த்த பூமரங்கள் எல்லாம் மாட்டின் மலக் குடலில் தங்கிப் பின்னர் வௌியேறி விட்டதென்றும் அறிகிறேன்.
இங்கே- சொந்த வானமில்லை.
நான் சுவாசிக்கின்ற காற்றுக்கூட இன்னொரு வீட்டாரின் உடைமைபோல் இருக்கிறது.
எப்படிப் பாடல் எழுதுவேன் நிலவே? தொண்ணூறாயிரம் வெள்ளிகளையும், உன்னையும் வானத்தையும் தொலைத்த நிலையில், என் வண்ணத்துப் பூச்சியையும் கட்டிலின் இடவில் வாழ்ந்த பல்லியையும் இழந்த நிலையில்?
நீ மேகத்தை எடுத்து முகத்தை மூடிக்கொள் கவிஞன் பெருமூச்சு விட்டால் குளிர் தென்றலும் கருகும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|