LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1109 - களவியல்

Next Kural >

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
[ மறைத்தல் வேண்டாமையின் அச்சமின்றியும் நாள்தோறுங் கூடுங் கூட்டமே இன்பஞ் சிறக்குமென வரைவுகடாவியவட்குச் சொல்வியது.] ஊடல் ஊணர்தல் புணர்தல் இவை- பழகப் பழகப் பாலும் புளித்தல்போல் நாளடைவில் இன்பங் குன்றிய புணர்ச்சியினிதாதற் பொருட்டு வேண்டியதான ஊடலும் , அது முதிர்ந்து உள்ளதையுங் கெடுக்காவாறு அளவறிந்து நீக்கலும் , அதன்பின் கூடலும் ஆகிய இவையன்றோ , காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமவின்பஞ் சிறந்தவர் பெற்ற பயன்கள். ஆடவர் தத்தம் தொழில்பற்றிப் பிரிந்துபோதலும் , அவர் வரவு குறித்த காலங் கடந்த விடத்துப் பெண்டிர் வருந்துதலும் , வந்தபின்பும் ஏதேனுமொன்று கருதிக்கொண்டு ஊடுதலும் , அதைக் கணவர் பல்வேறு வகையில் நீக்குதலும் , அதன்பின் கணவன் மனைவியர் கூடுதலும் ஆகிய இவைதாமே , வரைந்து கொண்ட கற்பொழுக்கத்தார் பெற்ற பயன் ! வரையாமையால் அருமைப் படுவதும் , மறைவால் இன்பஞ் சிறப்பதும் , இக்களவொழுக்கப் பேரின் பத்திற்கு அக்கற்பொழுக்க வூடவின்பம் எவ்வகையிலும் ஈடாகுமோ ? . அதை நான் வேண்டேன் என்று அதை இகழ்ந்தவாறு.
கலைஞர் உரை:
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.
Translation
The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtained.
Explanation
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.
Transliteration
Ootal Unardhal Punardhal Ivaikaamam Kootiyaar Petra Payan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >