விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பொன்னேரியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாத காரணத்தால் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்து வந்தனர். இதனைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டதை எண்ணிப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
|