|
||||||||
ஒரு கவிதைக்கான நேரத்துக் கோரிக்கை |
||||||||
பொங்கட்டும் கவிதை
பொங்கி வழியட்டும்
பூமரத்தின் அடியெல்லாம் நனையட்டும்.
அந்தப் பூமரத்தை வண்டு முகரட்டும்
கன்னியிலும் குருத்திலும்
எனது பெயர் கண்டு வியக்கட்டும்.
நீ விளக்கை அணை
நிலவு வருகிறது ஜன்னலுக்குள்.
நேற்றுத்தான் பக்குவப்பட்ட காற்றும்
ஓடி வருகிறது.
உம்மா! கொஞ்சம் வா
இந்தப் பூச்சியைத் தட்டு.
இது புதுமை உலகம்.
அதிலும் கவிதைக்கு வாழ்வை ஒப்படைத்த எனது
உலகம் மிகவும் புதுமை.
இங்குதான் இதயம் கால் முளைத்து நடக்கிறது.
நான் அசிங்கத்தைப் பழித்துக் காறித் துப்பிய
துப்பல்கள்கூட வெள்ளியாய் முளைக்கிறது.
நீ என் உலகத்துள் நுழையாதே
சிறகு சிலிர்த்த பலநூறு பறவை
கலைந்துவிடும்
போய்
மேகத்தைக் கவனி.
இனிப் பெய்யும் மழை
எனது கவிதை.
நான்தான் தலைமாரிக்குத் தலைவன்.
பொங்கட்டும் கவிதை பொங்கி வழியட்டும் பூமரத்தின் அடியெல்லாம் நனையட்டும்.
அந்தப் பூமரத்தை வண்டு முகரட்டும் கன்னியிலும் குருத்திலும் எனது பெயர் கண்டு வியக்கட்டும்.
நீ விளக்கை அணை நிலவு வருகிறது ஜன்னலுக்குள். நேற்றுத்தான் பக்குவப்பட்ட காற்றும் ஓடி வருகிறது. உம்மா! கொஞ்சம் வா இந்தப் பூச்சியைத் தட்டு.
இது புதுமை உலகம். அதிலும் கவிதைக்கு வாழ்வை ஒப்படைத்த எனது உலகம் மிகவும் புதுமை.
இங்குதான் இதயம் கால் முளைத்து நடக்கிறது. நான் அசிங்கத்தைப் பழித்துக் காறித் துப்பிய துப்பல்கள்கூட வெள்ளியாய் முளைக்கிறது.
நீ என் உலகத்துள் நுழையாதே சிறகு சிலிர்த்த பலநூறு பறவை கலைந்துவிடும் போய் மேகத்தைக் கவனி. இனிப் பெய்யும் மழை எனது கவிதை. நான்தான் தலைமாரிக்குத் தலைவன்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|