LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஒரு நாள் என்பது- நிலாரவி

ஒரு நாள் என்பது

ஒரு நாட்காட்டியின்

 

தாள் கிழிதலாகவோ

 

 

 

முழுவதும் படிக்க

 

முடியாமல்

 

புரட்டப்படுகிற

 

புரியாத புத்தகத்தின்

 

இன்னொரு

 

பக்கமாகவோ

 

 

 

இரு இரவுகள்

 

சந்திக்க இயலாமல்

 

பிரித்து விடுகிற

 

ஒரு

 

இடைவெளியாகவோ

 

 

 

தனிமையின்

 

தழுவலில்

 

தவிக்க வைக்கும்

 

அனலாகவோ

 

 

 

ஒரு காத்திருப்பின்

 

இலக்காகவோ

 

கூடலாகவோ

 

மீட்சியாகவோ

 

 

 

ஒன்றை ஒன்று

 

தள்ளிச்செல்லும

 

மணித்துளிகளின்

 

கூட்ட நெரிசலாகவோ

 

 

 

ஜனன மரணங்களின்

 

நாட்குறிப்பாகவோ

 

 

 

மறந்து போகிற

 

மற்றொரு செய்தியாகவோ

 

 

 

பந்தயத்துவக்கத்தில்

 

வரையப்படும்

 

பாதக்கோடுகளாகவோ

 

 

 

மூச்சிறைக்க

 

முந்திச்சேரும் மறுமுனையாகவோ

 

 

 

கை வலைகளில்

 

சிக்காமல் கடந்துவிடுகிற

 

காலநதியின் ஒருமீனாகவோ

 

 

 

கடக்க இயலாமல்

 

நீண்டு விரிகிற

 

காலவெளியாகவோ

 

இருக்கலாம்

 

 

 

இருப்பினும்

 

இறுதியில்

 

ஒரு நாள் என்பது

 

இமை திறப்பில் துவங்கி

 

இமை மூடலில்

 

நிகழ்வதுவிடுவது தானே...

 

 

 

நிலாரவி.

by Nilaravi   on 17 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.