LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

ஒருவழித் தணத்தல்

தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்.
263.
கதிக்கன்பர் தேடுங் கலசத் தியாகர் கவின்கலைசைப்
பதிக்கின்று போகிச் சிவகங்கை யாடிப் பலன்பெற்றென்றூழ்
உதிக்குமுன் னான்வரு கேன்வருங் காறு முவளைநல்லாய்
ததிக்குண்மத் தென்னச் சுழலாம லுன்கடன் றாங்குவதே. 1

பாங்கி விலக்கல்.
264.
சீர்க்குன் றனைய புயத்தீர் கலைசைத் தியாகர்வெற்பில்
வார்க்கும்ப மென்முலை யல்குற் சுனையன்றி மற்றுமும
தூர்க்குணின் றாடுந் தடமுள தேனன் றுமதுதடந்
தேர்க்குமுன் னின்று தடுக்ககி லேஞ்செல்லுஞ் செல்லுமின்றே. 2

தலைவன் நீங்கல் வேண்டல்.
265.
படித்திரு வாவிக் கலைசைத் தியாகர் பணியதுபோல்
முடித்திடு மோர்குறை யுண்டதற் கின்றொரு முன்வினையெற்
பிடித்திழுக் கின்றது சென்றஃ தாற்றுபு பின்னரிங்கே
அடித்திரும் பாமுனம் யான்வரு வேன்றைய லையுறலே. 3

பாங்கி விடுத்தல்.
266.
அருளோடு வாழுங் கலைசைத் தியாகருக் கன்புசெய்வார்
மருளோடு கூடலில் லாமனம் போற்செலின் மன்னவரே
இருளோடு கூடிய கண்போ லிருக்கு மிவள்பொருட்டால்
தெருளோடு பானுவி னாளைவந் தேயருள் செய்யுமினே. 4

பாங்கி தலைவிக்கு அவன்செலவுணர்த்தல்.
267.
ஒருகா ரணமுண்டு நாளொன்றின் மீள்வலென் றுண்மையொலி
பெருகா ரணமெனச் சொற்றகன் றார்கட் பிணையலைம்பாற்
செருகா ரணங்கு கலைசைத் தியாகர் திருமிடற்றைப்
பொருகா ரணவும் பொழிற்கோ விருந்த புரந்தனக்கே. 5

தலைவி நெஞ்சொடு புலத்தல்.
268.
மான்றாவு மத்தர் கலைசைத் தியாகர் வரையிலெம்மை
ஏன்றா தரவி னிளமுலைப் போக மினிதருந்தித்
தேன்றா னெனக் கென்று நீநான்வண் டென்றவர் தேடவின்று
தோன்றா ‍தொளித்தனர் நெஞ்சேநன் றாலவர் சொல்லுண்மையே. 6

சென்றோன் நீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி.

269.
புற்றா டரவர் கலைசைத் தியாகர் புரியருள்போல்
வற்றாத பாலித் துறைவர்க் கியான்கங்குல் வாயுறக்கம்
அற்றா குலமுறல் கூறா யிடையி லமளிவந்து
சுற்றாத பூவணை மேற்றுணை யோடுந் துயிலன்னமே. 7

தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்.
270.
கார்வாழுங் கண்டர் கலசத் தியாகர் கலைசையன்பர்
தேர்வாய் மணியொலி கேட்பமிப் போது சிறிதுமஞ்சேல்
போர்வாண்மைக் கண்ணி யவர்தார்ப் பரிமளம் போலுமவர்
ஊர்வாவி யுற்பல வாசமிங் கேவந் துலாவியதே. 8

பாங்கி தலைமகட்குத் தலைமகன் வந்தமை உணர்த்தல்.
271.
தேறற் கடிமலர்க் கோதாய் கலைசைத் தியாகர்வெற்பில்
ஏறப் படுமெய்ப் பசலையு நின்கண் ணிழிபுனலும்
மாறச் செறியிருண் மாரன் கணைபட்டு வந்தபுண்ணும்
ஆறப்பொற் றேர்மிசை யேறிவந் தாரங் ககன்றவரே. 9

வந்தோன்றன்னொடு பாங்கி நொந்து வினாதல்.
272.
செழுமைநந் தாத கலைசைத் தியாகர் சிறப்பன்பர்போல்
எழுமையும் பூண்ட தொடர்புடை யீரெங்கட் கென்றிருந்தேம்
முழுமையு மெம்மை மறந்தனிர் போலுமிம் மொய்குழலாள்
அழுமை நயனமங் கையாற் றுடைத்தங் ககன்றபின்னே. 10

தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்.
273.
மைப்படி யாரயிற் கண்ணீர் கலைசையுள் வந்து துதி
செப்படி யார்க்கருள் செய்யுஞ் சிதம்பர தேவருண்ட
வெப்படி யாவந்த பேராலம் போலும் விளையலர்கொண்
டெப்படி யாற்றி யிருவீரு மிங்ங னிருந்தனிரே. 11

பாங்கி இறைவியை ஆற்றுவித்ததிருந்த அருமை
தலைமகற்குச் சொல்லல்.
274.
இடராவ தொன்றணு காதிவ ளைப்புரந் தியானிருந்தேன்
நடராச ரெங்கள் கலைசைத் தியாகர்நன் னாட்டுமுன்னீர்ச்
சுடரார் மணி‍செந் திருவெனத் தோன்றுந் துறைவமையல்
அடராம லாற்றுவி யென்றன் றுரைத்த வருணினைந்தே. 12

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.