LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

ஒன்றிப்பு

 

ஆனாலும் மழைதான்.
நீ கூப்பிட்டுக் கத்தியும் எழுந்துவர முடியாமல்
கவட்டுக்குள் பூனை மனிதச் சூட்டிற்காய்
எப்போதோ வந்து வாடி அடித்ததையும்
நீ கூப்பிட்ட சத்தத்தில் பதாலித்து முழித்துத்தான்
அறிந்தேன், ஆனாலும் எழுந்துவர முடியவில்லை
கவட்டுக்குள் கைவைத்துப் படுப்பேன்.
நீ வந்து திறந்த கதவின் இடுக்காலே
என் கண்பார்வை சென்று தலைவாசல் தங்குகையில்
தெரிகிறது அலரி தலை கவிழ்த்து நிற்பதுவும்
மல்லிகை சந்திறங்கி அடைமாரித் தாக்கத்தால்
கட்டுக்கோப்பே குலைந்து விரித்தவிரல்
போலத் தூங்குவதும்
அதன் கீழே சில கோழி
தோப்புக்கரணம் போட நிற்பதைப்போல்
நிற்பதுவும்,
இன்னும் மண்ணூறிக்கிடப்பதுவும் தெரிகிறது.
சிணுசிணுத்த மழைத்தூற்றல் கூடத்தான். 
காலைப் பொழுது
சூரியனோ வரவில்லை.
அண்ணாவி இல்லாமல் பொல்லடிக்கும் விதமாக
எல்லோரும் பகலென்று எழுந்து செயற்படுதல்
மாரிமழைக்கும் உற்சாகம் ஊட்டியதோ?
கொட்டைப் பாக்காய் துளியும் பெருக்கிறது.
என்றாலும் எனது கவட்டுக்குள் கையிருக்கும்,
கால்மாட்டில் படுக்கும் பூனைக்கும் எனக்கொரு
இணக்கத்தைக் கொண்டுவந்த அடைமழைக்கு எங்களது
நிலைப்பாடு தெரியாது.
அது அடிக்கும் பலத்த அடி
பாலம் உடையும்,
நடைபாதை துண்டிக்கும்.
உம்மா!
நீ மட்டும் கத்தாமல்
போ.

 

ஆனாலும் மழைதான்.

நீ கூப்பிட்டுக் கத்தியும் எழுந்துவர முடியாமல்

கவட்டுக்குள் பூனை மனிதச் சூட்டிற்காய்

எப்போதோ வந்து வாடி அடித்ததையும்

நீ கூப்பிட்ட சத்தத்தில் பதாலித்து முழித்துத்தான்

அறிந்தேன், ஆனாலும் எழுந்துவர முடியவில்லை

கவட்டுக்குள் கைவைத்துப் படுப்பேன்.

 

நீ வந்து திறந்த கதவின் இடுக்காலே

என் கண்பார்வை சென்று தலைவாசல் தங்குகையில்

தெரிகிறது அலரி தலை கவிழ்த்து நிற்பதுவும்

மல்லிகை சந்திறங்கி அடைமாரித் தாக்கத்தால்

கட்டுக்கோப்பே குலைந்து விரித்தவிரல்

போலத் தூங்குவதும்

அதன் கீழே சில கோழி

தோப்புக்கரணம் போட நிற்பதைப்போல்

நிற்பதுவும்,

இன்னும் மண்ணூறிக்கிடப்பதுவும் தெரிகிறது.

சிணுசிணுத்த மழைத்தூற்றல் கூடத்தான். 

 

காலைப் பொழுது

சூரியனோ வரவில்லை.

அண்ணாவி இல்லாமல் பொல்லடிக்கும் விதமாக

எல்லோரும் பகலென்று எழுந்து செயற்படுதல்

மாரிமழைக்கும் உற்சாகம் ஊட்டியதோ?

கொட்டைப் பாக்காய் துளியும் பெருக்கிறது.

என்றாலும் எனது கவட்டுக்குள் கையிருக்கும்,

கால்மாட்டில் படுக்கும் பூனைக்கும் எனக்கொரு

இணக்கத்தைக் கொண்டுவந்த அடைமழைக்கு எங்களது

நிலைப்பாடு தெரியாது.

அது அடிக்கும் பலத்த அடி

பாலம் உடையும்,

நடைபாதை துண்டிக்கும்.

 

உம்மா!

நீ மட்டும் கத்தாமல்

போ.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.