|
||||||||
ஒயிற்கும்மி |
||||||||
மும்மையில் விரையும் முடுகியல் தாங்கியும்
எதுகையும் இயைபும் இடையிடை மிடைந்தும்
ஒலிசிறந் திசைப்பது ஒயிற்கும்மி யாகும்.
கருத்து : விரைவு மும்மையில் நடக்கும்; முடுகியல் அடிகள் தாங்கியிருக்கும்; எதுகைத் தொடையும், இயைபுத் தொடையும் இடையிடையே செறிந்திருக்கும்; பாடலின் ஒலி சிறந்திருக்கும்; இவ்வாறான அமைப்பில் உள்ளது ஒயிற்கும்மியாகும்.
காட்டு : ஒயிற்கும்மி (விரைவு மும்மை)
தென்பரங் குன்றினில் மேவுங் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றுடு முமைப்பெற்றிடு
தில்லைவி நாயகன் காப்பாமே.
(முருகன் ஒயிற்கும்மி. தொடை.281)
இதில் தெ-தே-சி-தி-தி என்ற மோனையும், சிகர-மகர-திகழு என்ற எதுகையும் இடையிடை மிடைந்து வந்துள்ளதையும், இதன் பிற்பகுதியில் ‘தகதத்திமி’ என்னும் சந்தமுடைய நான்கு முடுகியற் சீர்கள் வந்துள்ளதையும் உணரலாம். இதில் இயைபு இல்லை.
5 சதுசிர இன ஏக தாளவட்டணையில் அடங்கும் 20 சீரடி பெற்று வரும் ஒயிற்கும்மியும் உண்டு. அவை நான்கசைத் தனிச்சொற்களையும் இடையே பெற்று வரும்.
காட்டு : ஒயிற்கும்மி (சதுசிர இன தாளம்)
மாவும்ப லாவும் கொய்யாவும் ஆரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும்.
(வெ.கோ.வ.சிந்து.தொடை.ப.281)
இதில் பழுக்கும், இருக்கும், வழுக்கும் என்ற இயைபும், ‘மகிழ்ந்துவாய்’ என்ற நாலசைத் தனிசொல்லும், ‘மலர்ந்த’ என்ற மூவசைத் தனிச்சொல்லும் வந்துள்ளதைக் காணலாம். எனவே ஒயிற்கும்மி; விரைவு நடையது; முடுகியல் அடிகளைக் கொண்டது; எதுகையும், இயைபும் இடையிடையே செறிந்தது; ஒலி சிறந்தது என்பது போதரும்.
மும்மையில் விரையும் முடுகியல் தாங்கியும் எதுகையும் இயைபும் இடையிடை மிடைந்தும் ஒலிசிறந் திசைப்பது ஒயிற்கும்மி யாகும். கருத்து : விரைவு மும்மையில் நடக்கும்; முடுகியல் அடிகள் தாங்கியிருக்கும்; எதுகைத் தொடையும், இயைபுத் தொடையும் இடையிடையே செறிந்திருக்கும்; பாடலின் ஒலி சிறந்திருக்கும்; இவ்வாறான அமைப்பில் உள்ளது ஒயிற்கும்மியாகும்.
காட்டு : ஒயிற்கும்மி (விரைவு மும்மை) தென்பரங் குன்றினில் மேவுங் குருபர தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச் சிகரத்திரு மகரக்குழை திகழுற்றுடு முமைப்பெற்றிடு தில்லைவி நாயகன் காப்பாமே. (முருகன் ஒயிற்கும்மி. தொடை.281) இதில் தெ-தே-சி-தி-தி என்ற மோனையும், சிகர-மகர-திகழு என்ற எதுகையும் இடையிடை மிடைந்து வந்துள்ளதையும், இதன் பிற்பகுதியில் ‘தகதத்திமி’ என்னும் சந்தமுடைய நான்கு முடுகியற் சீர்கள் வந்துள்ளதையும் உணரலாம். இதில் இயைபு இல்லை.
5 சதுசிர இன ஏக தாளவட்டணையில் அடங்கும் 20 சீரடி பெற்று வரும் ஒயிற்கும்மியும் உண்டு. அவை நான்கசைத் தனிச்சொற்களையும் இடையே பெற்று வரும்.
காட்டு : ஒயிற்கும்மி (சதுசிர இன தாளம்) மாவும்ப லாவும் கொய்யாவும் ஆரஞ்சியும் வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய் தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும் போவார டிவழுக்கும். (வெ.கோ.வ.சிந்து.தொடை.ப.281) இதில் பழுக்கும், இருக்கும், வழுக்கும் என்ற இயைபும், ‘மகிழ்ந்துவாய்’ என்ற நாலசைத் தனிசொல்லும், ‘மலர்ந்த’ என்ற மூவசைத் தனிச்சொல்லும் வந்துள்ளதைக் காணலாம். எனவே ஒயிற்கும்மி; விரைவு நடையது; முடுகியல் அடிகளைக் கொண்டது; எதுகையும், இயைபும் இடையிடையே செறிந்தது; ஒலி சிறந்தது என்பது போதரும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|