உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. கடந்த, 1949, ஏப்ரல், 27ல் பிறந்த சதாசிவம், 1973ல், சென்னையில், வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 1996ல், சென்னை ஐகோர்ட்டில், நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 ஏப்ரலில், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டிற்கு, மாற்றப்பட்டார். அதே ஆண்டு, ஆகஸ்ட்டில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, பதவி உயர்வு பெற்றார். தற்போது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள அவர், அடுத்த ஆண்டு, ஏப்ரல், 26ம் தேதி வரை, இந்தப் பதவியில் நீடிப்பார். இந்த பதவியேற்பு விழாவில், பாரத பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பிரபல வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|