LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

பாடாத பாடல்கள்

கன்னி கட்டும் போதே
பூக்கள் உதிர்ந்து விடுகின்றன.
கர்ப்பம் தா¢த்த அடுத்த கணமே
கருச்சிதைவு நிகழ்கிறது.
முளியாய் சிலவேளை முளைகள் தொ¢ந்தாலும்
திடீரென
துவாலை இறைத்துக் கட்டி விழுகிறது.
ரணவாடை வீசுகிறது.
முட்டைக்குள் கோழிக்குஞ்சு
சிறகு ரோமங்களுடன் மா¢த்துப் போகிறது.
ஆனாலும், நீ என்னைப் பாடச் சொல்கிறாய்.

தெருவில் பிணங்கள் நாறுகின்றன.
பூட்டை ரவைகள் உடைக்கும் பொழுதில்,
வெண் புறாக்கள்
தலை கெழிய வீழ்ந்து
சிறகொடியச் சுருண்டு துடிக்கின்றன.
பையன்கள் சொல்லாமல் போகிறார்கள்
கடலில் குருதி தெறிப்பதாகச் சொல்கிறார்கள்
கரையில் பிணங்களைத் தேடச் சொல்கிறார்கள்
கரையில் ஒதுங்கிய பிணங்கள்
கடலில் கொட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்.
ஆனாலும்
நீ என்னைப் பாடச் சொல்கிறாய்.

குருதி உறைந்த பாடல்கள்,
பிணங்கள் அழுகும் பாடல்கள்
இருள்,
கன்னங் கா¢ய புகையாய்
தலைமேல் கவியும் பாடல்கள்
கருச்சிதையாமல்
மூளியாய்
துவாலை இறைத்துக் கட்டி விழாமல்
நெஞ்சைப் பிளந்து
குரல்வளையில் இடறி
நாவில் வெடிக்கின்ற காலம் ஒன்று வரும்.
அப்போது கேள் -

இப்போது அல்ல.

by Swathi   on 26 Dec 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
14-May-2013 06:38:36 venkat said : Report Abuse
நன்றாக உள்ளது
 
14-May-2013 06:35:37 venkat said : Report Abuse
இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.