|
|||||
பால் கொழுக்கட்டை |
|||||
தேவையானவை : அரிசி மாவு - ஒரு கப் வெல்லம் பொடித்தது - அரை கப் பால் - ஒரு கப் தேங்காய்த்துருவல் - அரை கப் ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: 1.ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, மிதமான சூடு வரும் வரை வறுக்கவும். 2.2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும். 3.கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, நன்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு கொதிக்கும் நீரில் பிழிந்து விடவும். மாவு வேகும் வரை கிளற வேண்டாம். 3 - 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி போடவும் . 4.மேலும் ஒரு அச்சு மாவை எடுத்து பிழியவும். இதுவும் வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். இப்படியே எல்லா மாவையும் பிழிந்து வேக விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும். 4.இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், கால் கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். 5.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும். சூடாக வாழை இலையில் வைத்து சாப்பிடுவதே தனிச்சுவைதான். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|