LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

பாலூட்டிகள்

 

குழந்தாய்! உனக்கு நான்
முலையைத் திறந்து பாலூட்டுவது
சங்கடமாய் இருக்கிறது.
நீ என்
பூவரசம் மொட்டுத்தான்
வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட
நடுச்சாமப் பிறைதான்.
உயிர்தான்
இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும்
இன்னும் சொன்னால்
என்
ஈரல் இளமாங்காய் பித்து
எல்லாமே நீதான்.
என்வயிற்றில்
உண்டான காய்தான்.
அதிலொன்றும் குறையில்லை.
என் முகவெட்டை அப்படியே
உாித்துக் கொண்டு பிறந்த கிளிதான்.
அதிலொன்றும் குறையில்லை. 
என்றாலும் உனக்கு நான்
முலையைத் திறந்து பாலூட்டுவது
சங்கடமாய் இருக்கிறது. 
இந்த முலைப்பால்
என்
இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம்,
கோதுடைந்த
கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று.
மரங்களிலே கேருகின்ற
எந்தக் குயிற் பேடும்
தன்
நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிாியமுடன்
ஊட்ட விதியற்றுப்போன பொக்கிசம்.
இந்தப் பாலைத்தான்
பத்தியமாய் உனக்குத்தான்
ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது.
இன்றைக்கு நீ மொட்டு.
மனங்குருத்தைப் போல
போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து
"உம்மா" என
உச்சி குளிர்ந்திட
கத்தி விறைக்கின்ற பாலரசி.
நாளைக்கு....
இது
என்ர
திராய்க் குஞ்சு.

 

குழந்தாய்! உனக்கு நான்

முலையைத் திறந்து பாலூட்டுவது

சங்கடமாய் இருக்கிறது.

 

நீ என்

பூவரசம் மொட்டுத்தான்

வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட

நடுச்சாமப் பிறைதான்.

 

உயிர்தான்

இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும்

இன்னும் சொன்னால்

என்

ஈரல் இளமாங்காய் பித்து

எல்லாமே நீதான்.

என்வயிற்றில்

உண்டான காய்தான்.

 

அதிலொன்றும் குறையில்லை.

என் முகவெட்டை அப்படியே

உாித்துக் கொண்டு பிறந்த கிளிதான்.

அதிலொன்றும் குறையில்லை. 

 

என்றாலும் உனக்கு நான்

முலையைத் திறந்து பாலூட்டுவது

சங்கடமாய் இருக்கிறது. 

 

இந்த முலைப்பால்

என்

இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம்,

கோதுடைந்த

கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று.

மரங்களிலே கேருகின்ற

எந்தக் குயிற் பேடும்

தன்

நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிாியமுடன்

ஊட்ட விதியற்றுப்போன பொக்கிசம்.

 

இந்தப் பாலைத்தான்

பத்தியமாய் உனக்குத்தான்

ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது.

 

இன்றைக்கு நீ மொட்டு.

மனங்குருத்தைப் போல

போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து

"உம்மா" என

உச்சி குளிர்ந்திட

கத்தி விறைக்கின்ற பாலரசி.

நாளைக்கு....

இது

என்ர

திராய்க் குஞ்சு.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.